Friday 24 November 2023

வையாபுரி கும்பாபிஷேக விழாவில் மனிதத்தேனீ சிறப்புரை.

 வையாபுரி கும்பாபிஷேக விழாவில் மனிதத்தேனீ சிறப்புரை.

இன்று காலை நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா குழிபிறை அருகில் உள்ள வையாபுரி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில்
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
வாழவைக்கும் வையாபுரி என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார்.
குழிபிறை ஊராட்சித் தலைவர் கோடீஸ்வரா எஸ். அழகப்பன் முன்னிலை வகித்தார்.
திருப்பணிக் குழுத் தலைவர்
குழிபிறை லெ. வள்ளியப்பன் தலைமையில் பனையபட்டி
ந. சுப்பிரமணியன், கோவனூர் விஎஸ்பி. சிங்காரம், பனையபட்டி கேஆர். ராமநாதன், மதியாணி எஸ். பால்சாமி, கண்டெடுத்தான்பட்டி அ. பழனிவேல், வாழக்குறிச்சி ராம. சுப்பையா, செம்பூதி எஸ். முத்துக்குமார், அரசமலை கேஆர். வீரப்பன், இல்லினிப்பட்டி பாண்டிலிங்கம், வையாபுரி எஸ். பாலசுப்பிரமணிய பட்டர், கே. சேகர், பிஎல். கண்ணுசாமி உள்ளிட்ட பெருமக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நகரத்தார்கள் நாட்டார்கள் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் முப்பதாயிரம் மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
யாகசாலை, அன்னதானம் என விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
எம்ஆர். ராஜேந்திரன் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.
வாழிய அறப்பணிகள்

































No comments:

Post a Comment