Friday 3 November 2023

நாளும் போற்றி மகிழ்வோம்

 நாளும் போற்றி மகிழ்வோம் . . .

*செய்நன்றி பலன் எதிர்பாராதே,*
*எதிர்பார்ப்போர் உதவி பெறாதே,*
*பெற்ற உதவிக்கு உண்மையாயிரு,*
*நன்றி மறப்பின் வன்மம் வளர்க்காதே,*
*உன் மனதுக்கு நல்லவனாய் இரு. *
*நன்றி மறவா உள்ளம் வேண்டும்,*
*நாளும் போற்றும் நெஞ்சம் வேண்டும். *
*எண்ணமும் செயலும் செழித்திட.*
*சில துரோகங்கள்
வலியைத் தந்தாலும்,
அத்தகைய துரோகங்கள்
வாழவும் காற்றுத் தருகிறது என்பதும் மறுக்க முடியாது.*
*தன்னைத் தானே வருத்திக்கொள்பவர்கள் கோழைகள் அல்ல. மனதில் உள்ள வலிகளை பிறர்மீது
திணிக்கத் தெரியாதவர்கள்.*
*பிரச்சனையில்
இருக்கும் ஒருவனுக்கு
என்ன வேணும் என்று கேட்பவர்களை விட, அவனுக்கு
நல்லா வேணும் என்பவர்களே
இங்கு அதிகம் இருக்கிறார்கள்.*
*அருகில்
இருப்பவர்கள் எல்லாம் உங்களுக்கானவர்களும் இல்லை. தொலைவில்
இருப்பவர்கள் எல்லாம் உங்களை வெறுத்தவர்களும் இல்லை.*
*எதையும்
கடந்து செல்லுங்கள்
சுமந்து செல்லாதீர்கள்.*

No comments:

Post a Comment