Wednesday 22 November 2023

அறிவும் ஆசையும் .

 அறிவும் ஆசையும் . .

வெற்றியோ
தோல்வியோ
எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும்
கவலை வேண்டாம்.
நமது திறமையும்,
நேர்மையும்
வெளியாகும் போது
பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
விதண்டாவாதிகளின் சபையில் விவாதம் பண்ணாதீர்கள்.
விறகுக் கடைக்காரர் கண்ணுக்கு வீணை
கிலோ கணக்கில் தான் தெரியும்.
உங்களுக்குப் பின்னால் இருப்பதும், உங்களுக்கு முன்னால் இருப்பதும், உங்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் சிறிய விஷயங்களே.
பிறர் பாராட்டவில்லை
என்பதற்காக
உங்களது நல்ல குணங்களைக் கைவிடாதீர்கள்.
*பசிக்கு உணவைத் தேடும் வரை ஆரோக்கியமாகத் தான் இருந்தோம். ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு பணத்தைத் தேட ஆரம்பித்தபோது தான் சீரழிந்தோம்.*
*அறிவை முதலீடாக வைத்து அரண்மனை வாங்கலாம்.
ஆசையை முதலீடாக வைத்தால் துன்பத்தைத்தான் வாங்க முடியும்.*
*வாழ்வில் ஆசைக்கு முதலிடம் கொடுத்தால் அதுவே உங்களை வாழ்வில் இறுதி இடத்திற்குத்
தள்ளி விடும்.*
*ஆசை இல்லாத மனிதனைக்
காண்பது அரிது.
ஆசை கொள்ளாத
மனிதனாக வாழ்வது பெரிது.*

No comments:

Post a Comment