Thursday 2 November 2023

நம்பிக்கை எனும் சிறு நூல் . . . .

 நம்பிக்கை எனும் சிறு நூல் . . . .

கவலை என்பது
சிறிய நூல் போன்றது.
கட்டிப் போட்டு விடும் நம் செயல்களை.
அது கவனத்தைச் சிதறச்
செய்து வாழ்க்கையை வருத்தி விடும்.
தன்னம்பிக்கை என்னும் ஒளி உள்ளெழுந்தால்
கடந்திடலாம் எல்லாவற்றையும்.
பயனற்ற சிந்தையால்,
பலமற்றுப் போகாதீர்கள்.
மரங்கள்
காற்றைச் சுத்தம் செய்கின்றன நம்பிக்கை
மனதைச் சுத்தம் செய்கிறது.
ஓட்டைப்படகும் ஒடிந்த துடுப்பும்
வைத்துக் கொண்டும்
கரை சேரலாம்
கடல் போல் நம்பிக்கை இருந்தால்.
நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்றுங்கள்
அதில் புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்றுங்கள்.
போராட்டமே வாழ்க்கை
நம்பிக்கையே வெற்றி
நம்பிக்கை சிறு நூல் தான்.
ஆனால் அந்த நூலில்
கட்டி காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்க விடலாம்.
நம்பிக்கையோடு
முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment