Thursday 9 November 2023

காலம் நேரம் பாரம்

 காலம் நேரம் பாரம் . . .

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை.
மாட்டுக்கு
உயிர்,
அறிவு
இரண்டும் உண்டு.
ஆனால் வண்டிக்காரன்
உயிரில்லாத வண்டியை
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து,
வண்டியை செலுத்துவான்.
எவ்வளவு தூரம்.
எவ்வளவு நேரம்.
எவ்வளவு பாரம்.
அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன்
மட்டுமே.
அறிவிருந்தும்
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது.
அதுபோல
உடம்பு என்ற ஜட வண்டியை
ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்.
*அவனே தீர்மானிப்பவன்*
*அவன் இயக்குவான்..*
*மனிதன் இயங்குகிறான்*
எவ்வளவு காலம்..
எவ்வளவு நேரம்..
எவ்வளவு பாரம்..
*தீர்மானிப்பது இறைவனே*
இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் *டிசைன்..*
இதுதான் இறைவன் நமக்கு தந்திருக்கும் *அசைன்மென்ட்..*
*இதை உணர்ந்தவனுக்குதத்
துயரம் இல்லை..*
*இதை உணராதவனுக்கு
அமைதி இல்லை.*
*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே. *

No comments:

Post a Comment