Monday 20 November 2023

கர்வமும் அலட்சியமும் . .

 கர்வமும் அலட்சியமும் . .

தோல்வியில்
துவண்டு விடாதீர்கள்,
தன்னம்பிக்கை
இழந்து விடாதீர்கள்,
முயற்சியை நிறுத்தி விடாதீர்கள்
என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
ஆனால்
வெற்றி பெற்றவர்களுக்கு
யாரும் அதிகம் அறிவுரை சொல்வது இல்லை.
காரணம்
வெற்றி பெற்றவர்கள்
அறிவு மிக்கவர்கள்,
நல்ல உழைப்பாளிகள்,
எல்லாம் தெரிந்தவர்கள்
என்று பலர் மனதிலும் இருப்பது தான்.
அதெல்லாம்
மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை.
வெற்றி பெற்றவர்கள்
மனதிலேயே அந்த எண்ணம் உறுதியாகத் தோன்றும் போது
அது எதிர்கால ஆபத்திற்கு அடிக்கல் போடுகிறது.
வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்றவல்லது.
அது முக்கியமாக
மூன்று
குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்தவல்லது..
''கர்வம்.
வெற்றி ஒருவரிடம்
“என்னை மிஞ்ச ஆளில்லை”
என்ற கர்வத்தை ஏற்படுத்தலாம். கர்வத்தைப் போல
வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்..
''அலட்சியம்.''
வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக்கூடியது.
அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் தங்களை
ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
''எந்த அறிவுரையும் கேளாமை.''
வெற்றி பெற்றவர்களுக்கு
யாருடைய அறிவுரையும்
தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு.
எல்லாம்
எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள்,
அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு
அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.
தோல்வி அடையும் காலத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் நேரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள்.
கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள்.
அப்படிக் கவனமாய் இருந்தால்
மட்டுமே வெற்றியை
நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
வாழ்க்கையில்
தொடர்ந்து முன்னேறுவதும்
அப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

No comments:

Post a Comment