Friday 21 October 2022
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் நேற்று காலை மதுரை டி பி கே ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் அதன் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தியாக தீபம் அ. பாலு வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் அனைவருக்கும் தீபாவளி பரிசு மற்றும் இனிப்பு பாக்கெட் வழங்கினார். ஆன்மீக அறிஞர், புத்தகக் கடை அண்ணாமலை தீபாவளி சிறப்பு மலர் வழங்கினார். நற்பணி மன்ற முன்னோடிகள் கவிஞர் மு. முருகேசன், குடந்தை ரகுநாதன், சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர் மீ. ராமசுப்பிரமணியன், ஏ சி. பாபுலால், கவிஞர் சு. பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர்கள் ரெ. கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment