Wednesday 26 October 2022

ஆனந்தமாய் வாழலாம்.

 ஆனந்தமாய் வாழலாம்.

நிம்மதியாக இருங்கள்.
எதுவும் உங்கள் கையில் இல்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்;
ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை.
எது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள். உங்கள் உடலே உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!.
உங்களின் உடம்பே உங்கள் பேச்சைக் கேட்காத போது,
உலகில் வேறு யார் கேட்பார்.
உடலை விடுங்கள்.
உங்களின் தலை முடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை.
முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத்தான் பிடிக்கும். முடி நரைப்பதையோ, உதிர்வதையோ
உங்களால் தடுக்க முடியவில்லையே.
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா
உங்களுக்குத் தெரியாது.
உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள். அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும்
நீங்களா இயக்குகிறீர்கள்.இல்லையே.
இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது,
மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது, உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது!.
நட்சத்திரங்கள் உங்களது
பொறுப்பிலா ஜொலிக்கின்றன, நீங்கள்தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப்பிடிப்பவரோ, உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை.
*எதுவுமே உங்கள் பொறுப்பில் இல்லை.*
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
உங்களுக்கு ஏன் வீண் கவலை, எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்.
ஆனந்தமாய் வாழலாம்.

No comments:

Post a Comment