பகிர்தலைக் கற்றுத் தரும் காக்கை.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உங்களை ஒரு நாள் தலை குனிய வைக்கும்.
அன்று புரியும், நீங்கள் ஏமாற்றியது அவர்களை அல்ல உங்களை என்று.
உங்களை நம்பும் மனிதர்களிடம் பொய் பேசாதீர்கள்.. உங்களிடம் பொய் பேசும் மனிதர்களை நீங்களும் நம்பி ஏமாறாதீர்கள்.
இறைவன் படைப்பில் உங்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அதைத் தொலைத்து விடாதீர்கள்.
உண்மை பேசி வீழ்ந்தவர்களும் இல்லை. பொய் பேசி வாழ்ந்தவர்களும் இல்லை.
காகத்தின் அழகு குறைவு தான்,
அதனிடம் பகிர்தலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்பமோ, துன்பமோ தன் கூட்டத்தோடு பகிர்ந்து கொள்கிறது.
பார்வையில் இருப்பதை விட,
பண்பைப் பார்த்தால்
வெற்றி நிச்சயம்.
சுத்தியலுக்கு பார்க்கிறதெல்லாம்
ஆணியாகத்தான் தெரியும்.
மனசாட்சிக்கு மட்டும் பயந்து வாழ்ந்தால் போதுமானது.
வாழ்க்கை உண்மையாக மாறும்.
No comments:
Post a Comment