அன்னக்காவடியின் புலமை.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர்
ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் திண்ணைப் பள்ளிக்கூடப்
படிப்பினை முடித்தார்.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த ஊருக்கு அன்னக்காவடி சாமியார் ஒருவர் வந்தார்.
அன்னக்காவடி சாமியார்கள் காவி உடை அணிந்திருப்பார்கள். தங்களின் தோள்பட்டையில் தராசு போன்று பிச்சைப் பாத்திரங்களைத் தூக்கிச் செல்வார்கள்.
ஒரு உலக்கை போன்ற மரத்தடியின் இருமுனைகளிலும் இரும்புச் சங்கிலிகளைத் தொங்கவிட்டு அதில் ஒரு உலோகத்தட்டினை இணைத்து அதன் மேல் பானைகளை வைத்திருப்பார்கள். இதற்குப் பெயர் அன்னக் காவடியாகும்.
ஒரு பாத்திரத்தில் சாதமும் மற்ற பாத்திரத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு, அரிசி போன்ற
தானியங்களையும்
பெற்றுக் கொள்வார்கள்.
ஒரே ஊரில் தங்கி இருக்க மாட்டார்கள். ஊர் ஊராகச் சென்று கொண்டே இருப்பார்கள்.
இப்போது இந்த ஊருக்கு வந்திருக்கும் அன்னக்காவடி சாமியார் சிறந்த படிப்பாளி என்றும், தமிழ் இலக்கணம் கரைத்துக் குடித்தவர் என்றும், அதிலும் அணி இலக்கணமான தண்டியலங்காரத்தில் ஒப்பிலாப்
புலமை பெற்றவர் என்றும் ஊரார் சொன்ன வார்த்தைகள் அந்த ஏழை மாணவர் காதுக்கு எட்டியது.
அவரும் சாமியாரிடம் வந்து தமக்கு பாடம் சொல்லித்தர வேண்டினார்.
அதற்கு அந்த அன்னக்காவடி சாமியாரும் “சரி உனக்கு நான் பாடம் சொல்லித் தருகிறேன். அதற்கு நீ எவ்வளவு சன்மானம் கொடுப்பாய்?” எனக் கேட்டார்.
மாணவரோ “ஐயா! என்னிடம் தங்களுக்கு தரும் அளவுக்கு பணம் ஏதுமில்லை, ஆனால் அதற்குப் பதிலாக நான் உங்களுக்கு
பணிவிடை செய்கிறேன்” என்றாராம்.
அதற்குச் சாமியார் “நானோ ஒரு ஆண்டி! பிச்சை எடுக்கும் பஞ்சப்
பரதேசி. எனக்கு எதற்கப்பா
பணிவிடை?” எனச் சிரித்து விட்டு, “சரி! நீ ஒன்று செய்! இந்த அன்னக்காவடியை சுமந்து கொண்டு நான் பிச்சை எடுக்கும் இடமெல்லாம் என்னுடன் வா. நான் ஓய்வாக இருக்கும் நேரமெல்லாம் உனக்கு பாடம் சொல்லித் தருகிறேன்.” என்றாராம்.
உடனே அந்த மாணவரும் மனம் மகிழ்ந்து அன்னக்காவடியை தோளில் சுமந்து சாமியாரோடு
பிச்சைக்குச் செல்லத் தொடங்கினார்.
ஊரே இந்தக் காட்சியினைக் கண்டு அதிசயித்தது. அந்த ஏழை மாணவர் யார் தெரியுமா.
இவர் *கலிகாலக் கம்பர்* என்றும்,
ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர் என்றும் போற்றப்பட்ட திரிசிபுரம்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை‘*
அவர்கள் தான்.
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே” எனும் அவ்வையரின் பாடல்
வரிகளைப் படித்திருக்கிறோம்.
ஆனால் தமது ஆசிரியருக்காகப்
பிச்சை பெற்று படித்த பெருந்தகை *‘திரிசிபுரம்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை’*
அவர்கள் தான்.
கல்வி எந்த அளவுக்கு முக்கியம் என இந்த நிகழ்வின் மூலம் உணரலாம்.
No comments:
Post a Comment