Friday 21 October 2022

எங்கள் மாநகர் மதுரையில் நகரத்தார்களின் முன்னோடி, மிட்லாண்ட் ஹோட்டல் அண்ணாமலை என அறியப்படும் சக்தி சிவம் திரையரங்க உரிமையாளர், அன்பு அண்ணன், புதுவயல் ஆர் எம் எம் அண்ணாமலை அவர்கள் இளையாத்தங்குடி கோவில் அருள்மிகு மகாலெட்சுமி க்கு வெள்ளி அங்கி மண்டாலாபிசேகத்தில் சாத்துவதாக வேண்டினார்கள். அண்ணன அண்ணாமலை அவர்கள் விண்ணில் இருந்து பார்க்க அவரது இல்லத்தரசியார் வள்ளி அண்ணாமலை வழி காட்டலில் அவர்கள் மகன் எம். ஏ. . முத்தையா, மருமகள் ஹேம வர்னேஷ்வரி முத்தையா அதனை முறையாக நேற்று இரவு வழங்கி வழிபட்டனர். இந்த அறப் பணியில் அதன் நிர்வாக அறங்காவலர் அருமைச் சகோதரர் மூன் ஸ்டார் லேனா என்ற காரைக்குடி லெட்சுமணன், பெரியவர் ஏசி. முத்தையா தம்பதியர், எங்கள் பள்ளத்தூரின் பெருமைக்குரிய முருகப்பா குழுமத்தின் நிர்வாக இயக்குநர், பண்பாட்டுச் செம்மல் மு மு முருகப்பன், எஸ் எல் என் பெரியணன் அவர்கள் உள்ளனர். வாழிய அறப்பணிகள் - மனிதத்தேனீ






No comments:

Post a Comment