Monday 3 October 2022

உண்மையைப் பேசு.

 உண்மையைப் பேசு.

உதவி கேட்பவருக்குச் செய்.
உயர்ந்த நிலையை அடைவாய்.
உனது நல்ல மனம்தான் உனக்கு உதவி செய்யும்.
பெற்றோர், உறவினர்கூட அந்த அளவுக்குச் செய்ய முடியாது.
மாட்டு வண்டியின் சக்கரம் மாட்டின் காலை பின்தொடரும். அதுபோல நீ செய்யும் பாவம் உன்னைத் தொடரும்.
உன்னுடைய நிழல் போல, நீ செய்த புண்ணியமும் உன்னைத் தொடரும்.
புதிதாய்க் கறந்த பசும்பாலைப் போல, பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறுவதில்லை.
பாவத்தைச் செய்வது எளிது. ஆனால் புண்ணியத்தைச் செய்வது கடினம்.
பெற்றோரை ஆதரித்தல், மனைவி, குழந்தைகளைப் போற்றுதல் இதுதான் வாழ்வின் பெரும் பாக்கியம்.
நங்கூரம் பாய்ச்சிய கப்பல்போல உனது மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
பிறப்புக்குக் காரணம் எதுவோ, அதுவே இறப்புக்கும் காரணம்.
அறிவு, ஒழுக்கமே ஒருவரை மதிப்பிடும் அளவுகோல். பிறப்பு அல்ல.
ஆசையை வென்ற மனிதனை எவராலும் வெல்ல முடியாது.
நீ உன்னைப் புரிந்து கொண்டால், பிறரை புரிந்து கொண்டதற்கு சமமாகும்.
நல்லதை செய்வதற்குச் சிறிது தாமதித்தாலும் மனம் மாறிவிடும். உடனே செய்துவிடு.
பாவத்தின் திறவுகோல் ஆசை.
ஞானத்தின் திறவுகோல் அன்பு

No comments:

Post a Comment