Wednesday 19 October 2022
குள்ளநரிக் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அதில் வெல்லற்கரிய சிங்கம் போல தோற்றம் காட்டிய ஜெயலலிதாவை எப்படியெல்லாம் திட்டம் போட்டு தீர்வை நோக்கி நகர்த்தியுள்ளனர், அவரது கூட்டாளிகள்! அதிர வைக்கும் உண்மைகளை தோலுரித்து காட்டிய நேர்மையான நீதிபதி ஆறுமுகசாமிக்கு சல்யூட் ! மிக நேர்மையோடும், சமரசமின்றியும், உண்மைக்கான தேடுதலைக் கொண்டும் நீதிபதி ஆறுமுகசாமி செயல்பட்டார் என்பதை அவரது விசாரணை போக்கில் இருந்தே, அப்போதே நாம் யூகித்தோம்! இந்த உண்மை அவரது அறிக்கையில் ஒளி வீசுகிறது. அவரது நேர்மையான விசாரணை அணுகுமுறையை அதிமுக ஆட்சியாளர்களே விரும்பவில்லை. ஆகவே விசாரணை கமிஷன் அமைத்த ஆட்சியாளர்களே அவருக்கு ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்ததின் விளைவாக ஆறுமாத அவகாசத்தில் முடிக்க திட்டமிட்ட ஆணையத்தின் வேலையை 60 மாதங்களுக்கு நீட்டிக்க வைத்து விட்டனர். ‘ஏதோ ஒரு கண் துடைப்புக்காக தாங்கள் அமைத்த விசாரணை ஆணையம் தங்களையே காவு கேட்கும்’ என அதிமுக ஆட்சியாளர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள்! நய வஞ்சக நரிகளின் நடுவே வாழ்ந்த ஜெயலலிதா! முழுமையாக வாசிக்க கீழே முதல் கமெண்ட் பகுதியில் சொடுக்கவும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment