நேற்று இரவு சென்னை திருவொற்றியூர் நகரத்தார் சங்கத்தின் 39 ஆம் ஆண்டு விழாவில் மனிதத்தேனீ நமது பண்பாடும் மேன்மையும் என்ற தலைப்பில் 52 நிமிடம் சிறப்புரை.
விழாத் தலைமை மிகச் சிறந்த அறப்பணிச் செம்மல், விப்ரோ ரவி வீரப்பன், மற்றும் பொதுவாழ்வில் பல துறைச் செம்மல் கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், பணி நிறைவு பெற்ற அரசு உயர் அலுவலர்
சொ. வள்ளியம்மை ஆச்சி சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், வினாடி வினா, மாறுவேடப் போட்டி என சிறப்பாக நடைபெற்றது.
வினாடி வினா நிகழ்வு நடத்துனர் ஒருங்கிணைப்பாளர் நாசிக் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பாராட்டு பெற்றனர்.
காலை நிகழ்ச்சியாக குழந்தைகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சியை நகரத்தார் சிறகுகள் அமைப்பினர் சிறப்பாக நடத்தியதை பெரும்பாலோர் கண்டுகளித்தனர்.
மேலும் காலை முதல் இரவு வரை அனைவருக்கும் சிறப்பான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment