Wednesday 26 October 2022

எல்லை இல்லா மகிழ்ச்சி.

 எல்லை இல்லா மகிழ்ச்சி.

சும்மா தானே என்று
பொய்யாகப் பேசக்கூடாது.
வார்த்தை தானே என்று வாக்குறுதியைக் கொடுக்க கூடாது.
இரண்டுமே மதிப்பைக் கெடுக்கும்.
நம் குணங்களையே பிறரிடம் தேடுகிறோம்.
கைரேகை போல் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு குணம் என்பதை அறியாமல்.
நம்பியவர்களுக்கு கடவுளும்
நம்பாதவர்களுக்கு பெற்றோரும் கொடுத்த அழகான வாழ்விது
உங்களை வருத்திக் கொள்ளாமல் வாழுங்கள்.
வாழ்க்கையில் சந்தோஷமாக
இருக்க வழிகள்.
எப்போதும் யாருக்காவும்
கவலைப் படாதீர்கள்.
எளிமையாக வாழுங்கள்.
குறைவாக எதிர்பாருங்கள்.
அதிகம் கொடுங்கள்.
எப்போதும் சிரியுங்கள்.
கடவுளுடன் எப்போதும்
தொடர்பில் இருங்கள்.
நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
நாம் மற்றவரைப் போல வாழ நினைத்தால்
மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.
வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் "தன்னம்பிக்கை" அதை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment