கந்தக்கடவுளிடம் பக்தி கொண்டவர்களுக்கு மட்டுமான பதிவு இது.
மன அழுத்தத்தை நீக்க ரிலாக்ஸிங் டெக்னிக் மனோதத்துவ மருத்துவர்களால் உலகெங்கும் பரிந்துரைக்கப்படும் ஒரு யுக்தியாக பிரபலமடைந்து வருகிறது.
முருகக் கடவுளின் வேல், நம் உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு அங்கமாக பாதுகாக்க வேண்டி மனோரீதியாக அந்தந்த பாகங்களை தாரணைக்கு உட்படுத்தி ரிலாக்ஸ் செய்து கொள்வதை இந்த சஷ்டிக் கவசம் மிக அழகாக நமக்கு போதிக்கின்றது.
நெற்றியிலிருந்து பாதம் வரை கேசாதி பாதமாக நமது அங்கங்களை அழகாக அடுக்கி நம் உடல் உறுப்புகளையும் மனதையும் ஓட்டு மொத்தமாக ஓய்வடையச் செய்வது மட்டுமல்லாமல் நம்மைப் பேரமைதிக்குள் இட்டுச் செல்கிறது. குறைந்த பட்சமாக 36 முறையாவது இதை ஒரே ஒரு நாளாவது, உடல் கை கால் கழுவி தூய்மையோடு முருகனை நினைந்து ஓதினால் எல்லா நன்மைகளும் நம்மைத் தேடிவரும் எனக் கவசம் பகருகிறது.
செய்துதான் பார்ப்போமே!
நன்றி சிரிப்பானந்தா
No comments:
Post a Comment