Monday 31 October 2022

வாழ்க்கை இசையாகும்.

 வாழ்க்கை இசையாகும்.

துளைகளைக் கையாளப் பழகினால் மூங்கில் குழலாகும்.
துன்பங்களைக் கையாளப் பழகினால் வாழ்க்கை இசையாகும்.
எந்தச் சிக்கலும் உன்னைச் சிதைக்க வந்தது அல்ல.
செதுக்க வந்தவையே.
மகான் போல நீ வாழ
வேண்டும் என்றில்லை.
மனசாட்சிப் படி
வாழ்ந்தால் போதும்.
பணம் கூட ஒரு சில இடங்களில்
மட்டுமே தேவைப்படுது.
ஆனால், பொறுமை எல்லா இடத்துலேயும் தேவைப்படுது.
இரு மனதாய் செயல்பட்ட எந்தக் காரியமும் வெற்றியடைந்ததில்லை.
முழுமனதாய் செயல்பட்ட எந்தக் காரியமும் தோல்வியடைந்ததில்லை.
பல முயற்சிகளில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும்
நம்மை மிகப் பெரிய வெற்றிப் பாதையை
நோக்கி அழைத்துச் செல்லும்.
உண்மைகள் சில நேரங்களில் தொலைந்துத் தான் போகுமே தவிர
ஒரு போதும் தோற்றுப் போகாது .

No comments:

Post a Comment