Wednesday 26 August 2020

அதிகாலையில் எழுந்தால்

 அதிகாலையில் எழுந்தால்.

உடலும் மனமும் உற்சாகமாகும்..
காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைத்து விட்டு, அது அடிக்கும் போது அணைத்து விட்டு உறக்கத்தைத் தொடர்வதை நம்மில் பலரும் தினமும் செய்து தான் வருகிறோம்.
சர்வே ஒன்றில் அதிகாலையில் எழுபர்களின் மூளை மற்றவர்களை விட நன்கு செயல்படுவதாகத் தெரிய வந்து உள்ளது..
உங்களின் காலைப் பழக்கவழக்கங்கள் தான் நீங்கள் நாள் முழுவதும் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது
அதிகாலை என்றதும் பலரும் காலை 7 மணியைத் தான் சொல்கிறார்கள் என்று நினைப்போம்.
ஆனால் அதிகாலை என்பது காலை 4.30 அல்லது 5 மணியாகும். இந்நேரத்தில் எழுவதால் உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டுமே மேம்படும்.
மேலும் அன்றைய நாளில் உங்களது இலக்கை அடைய சிந்திப்பதற்குப் போதிய அளவு நேரம் கிடைக்கும்.
அதிகாலையில் எழுந்ததுமே இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான நீர் பருகுங்கள்.
அதிகாலை நடைப்பயிற்சி,ஏதாவது விளையாட்டு, மெதுவான ஓட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
மேலும் அதிகாலையில் நல்ல சுத்தமாகக் காற்றை சுவாசிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரித்து, வேலையில் உங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
எப்போதும் வேலை, வீடு என்று மட்டும் இருக்காமல், உலகில் என்ன நடக்கிறது என்பதையும் காலையில் தெரிந்து கொள்ளுங்கள்.
அதற்கு செய்தித்தாள்களை தினமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு அரை மணிநேரம் படிப்பதற்கு ஒதுக்குங்கள்..
உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாமல் வாழ்வது மிகவும் கடினம்... கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்..
அதிகாலை கண் விழிப்பு உங்களுக்கான நாளை உங்களுக்கு உற்சாகமான நாளாக மாற்றித் தரும். ஒவ்வொரு செயலையும் மிக நேர்த்தியாக செய்ய முடியும்.
உங்களின் அன்றாடப் பணிகள் எதுவானாலும் அதிக சிரமிமின்றி செய்து முடிக்க முடியும்..
நம்மைச் சுற்றி உள்ளோரைப் பார்த்தோம் என்றால் மிகப் பிரபலமானவர்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என்று அனைவருமே உலக அளவில் எடுத்துக் கொண்டோம் என்றால் காலை எழும் பழக்கத்தை கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
இதில் அவர்கள் அனைவர் இடத்திலும் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. ஒரு வேளை இந்த நல்ல பழக்கமே அவர்களின் வெற்றிக்கு ஒருவகையில் காரணம் என்று கூட நம்மை சிந்திக்க வைக்கிறது.
இன்று இந்தியா முழுதும் தெரிந்த பெயராகிப் போன பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் இறகுப் பந்து விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர்.
இந்த வெற்றியைப் பெற அவரின் விளையாட்டு, பயிற்சி, விடாமுயற்சி பற்றி பல செய்திகள் வந்து இருந்தாலும், அவர் அதிகாலை எழும் பழக்கம் உடையவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.
தினமும் அதிகாலை இறகுப் பந்து பயிற்சி மேற்கொண்டதால் தன்னால் இந்த இடத்தை அடைய முடிந்தது என்று ஒரு ஊடகப் பேட்டியில் அவரே சொல்லி உள்ளார்.
2005 முதல் 2010 வரை, சிந்து அதிகாலையில் எழுந்து தனது வீட்டில் இருந்து தினமும் 50 கிமீ தூரம் பயணித்து கோபிசந்தின் பயிற்சி அகாடமிக்குச் சென்று நான்கு மணி நேரம் பயிற்சி எடுப்பாராம்.
இதை அவர் தனது அன்றாடப் பணிகள் மற்றும் பள்ளி வேலைகளோடு செய்து வந்தார்.
இன்றும் கூட சிந்து அதிகாலை எழுந்து தயார் ஆகி பயிற்சிக்கு 4.30 மணிக்கு ரெடியாக இருப்பாராம்.
ஏன்..,என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.. நான் தினமும் காலையில் 4.30 மணிக்கு எழுந்து விடுவேன்.
காலைக் கடன்களை முடித்து விட்டு, உங்களுக்கு ‘’இன்றைய சிந்தனையை’’ பதிவை உங்களுக்கு ஆறு மணிக்குள் பதிவு செய்து விட்டு பின்பு விளையாடச் செல்வதை நான் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறேன்..
.
ஆம்.,நண்பர்களே..,
நேரத்தில் எழுவதால், மனம் புத்துணர்வு அடையும்,மனம் இலகுவாகி, பரபரப்பு இல்லாத வாழ்க்கையால், இரத்த ஓட்டம் சீராகி, உடலும் மனமும் உற்சாகம் ஆகும்..
அதிகாலை எழுவது சிரமமா என்ன..?.
முயன்று தான் பாருங்களேன்.

No comments:

Post a Comment