Monday 31 August 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 இந்த அப்பல்லோ என்பது மிக சர்ச்சையான மருத்துவமனையாகிவிட்டது, அதனை இன்னும் இங்கு இயங்கவிடுவது தமிழகத்துக்கு நல்லதே அல்ல‌

வசந்தகுமார் கொரோனாவில் அனுமதிக்கபட்டார் என்பது செய்தி, ஆனால் அவர் இறக்கும்பொழுது கொரோனா இல்லையாம்
பின் எப்படி இறந்தார் என்றால் ஏதேதோ சொல்லிகொண்டிருக்கின்றது நிர்வாகம்
ஆனான ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது, ஆறுமுகசாமி கனவில் இனி சாமி வந்து சொன்னால்தான் விஷயம் தெரியும்
ஜெயலலிதா என்பது வேறு விஷயம், ஆனால் கொரானா காலத்தில் இப்படி விஷயத்தை மூடி மறைத்தால் அந்த மகா பிரபலத்தின் இறுதி அஞ்சலியில் கொரோனா எப்படி பரவும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
அவரின் இறுதி அஞ்சலியில் சமூக இடைவெளி கடைபிடிக்கபட்டதாகவும் தெரியவில்லை, குமரியில் கொரானா குத்தாட்டம் ஆடும்பொழுது அரசு என்ன செய்கின்றது என்பதும் தெரியவில்லை
நடப்பது ஒன்றும் சரியாக படவில்லை. கொரோனா இப்பொழுதுதான் தீவிரமாகின்றது இன்னும் தமிழக அரசு திருந்தவில்லை, இருந்து பாருங்கள் இன்னும் இரு மாதங்களுக்குள் நிலமை படுமோசமாகி மறுபடியும் மிகபெரும் சிக்கலில் சிக்க போகின்றது தமிழகம்
அதன் விளைவும் அதற்கு கொடுக்க போகும் விலையும் மிக அதிகமாக இருக்கும் என்பதுதான் மகா வேதனையான விஷயம்

No comments:

Post a Comment