Monday 17 August 2020

வாழிய நலம்.

 வாழிய

நலம்.
திரைப்படப் பாடகர் மற்றும் குணச்சித்திரக் கலைஞர் என அறியப்பட்ட
மா மனிதர், தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டாலும் அனைத்து மொழிகளிலும் தம் அழகிய உச்சரிப்புடன் கூடிய குரலால் மக்கள் மனம் கவர்ந்தவர்
எஸ் பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்.
கடந்த சில நாள்களாக
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று உடல் நிலை குறித்துக் கவலை கொண்ட பல கோடி நல் இதயங்கள் அவருக்காக உலகம் முழுவதும் இறையருளை வேண்டி சமூக வலைத்தளங்களில் அளவற்ற பதிவுகளை உணர்வுடன் வெளிப்படுத்தி வருவதைப் பார்க்கும் போது இவரது பேராற்றல் பிரமிப்பாக உள்ளது.
வாழிய அவர் நலம். மக்கள் பிரார்த்தனை வெல்லும். மீண்டும் எஸ் பி பாலசுப்பிரமணியம் பணிகள் அனைவர் மனதையும் அள்ளும்.
நெகிழ்வுடன். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment