Tuesday 3 October 2023

முன்னேற்றம் வசப்படும் . .

 முன்னேற்றம் வசப்படும் . .

*தனக்குத் தெரியாது என்பதை
தெரிந்து வைத்திருப்பவனே
மிக உயர்ந்தவன்.*
*தனக்குத் தெரியாததை
தெரிந்தவன் போல பாசாங்கு
செய்கிறவன்
மனம் நலிந்தவன்.*
*நிறையத் தகவல்களை
திரட்டி வைத்திருக்கலாம்
சாத்திரங்கள் பல
படித்திருக்கலாம்
அவைகள் எல்லாம் நீ
அறிந்து இருப்பதல்ல.*
*உன்னுடைய ஜீவிதத்தின்
சாத்திரங்களைப்
படித்தாலொழிய
எந்த சாத்தியம்
இல்லை.*
*உன்னையே உனக்குத்
தெரியாது என்றால்
நீ வேறு எதைத்தான்
தெரிந்து வைத்திருக்க
முடியும்.*
*உன்னையே நீ அறிந்து
கொண்டால்.
அனைத்தையும் தெரிந்து
கொள்ளலாம். *
*உனக்குள் ஒரு தேடல்
எப்போதும் இருக்கட்டும்.
தேடல் தான் உன்னை
தேங்கி நிற்க விடாமல்
முன்னேற வைத்துக்
கொண்டே இருக்கும்.*
*நம் சிந்தனைகளின்
பிரதிபலிப்பு தான் நம் வாழ்க்கை.*
*ஒவ்வொரு நாளும் நாம் என்ன சிந்தனைகளுடன் நம் வாழ்க்கையை தொடங்குகிறோமோ அந்த சிந்தனைகளால் நாம் ஆக்கிரமிக்கப்படுகிறோம்.*
*நாம் எதைப்பற்றி
நினைக்கின்றோமோ அது நம்மை நோக்கி ஈர்க்கின்றன.*
*அதனால்
நல்லதையே சிந்தியுங்கள்.*
*ஒருவேளை கடந்த காலம் சற்று கடினமாக இருந்தாலும்
எதிர்காலம் சிறப்பாக
இருக்கும் என்று நம்புங்கள்.*
*எண்ணம் அழகானால்
எல்லாம் அழகாகும்.*
*நல்ல எண்ணங்களுடனும் பிரார்த்தனைகளுடனும்
உங்கள் நாட்களைத் தொடங்குங்கள்.*
*இறைவன் அருளால்
இந்த நாள் இன்பங்கள் நிறைந்த
ஒரு அற்புதமான
நாளாக அமையட்டும்..*

No comments:

Post a Comment