Tuesday 3 October 2023

நம்புங்கள் நடக்கும் . .

 நம்புங்கள் நடக்கும் . .

ஒரு ராஜா ஒரு கோவிலில்
தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றார்.
அவரைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மைப் பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றார் .
நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவர் தள்ளி நின்றதால் இவருக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவரை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவர் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு, எவ்வளவு போராட்டம், எவ்வளவு இழிசொல், போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே என்று தன் விதியை நொந்துகொண்டார்.
மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தார் . குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தார் .
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்தப் படித்துறையில் காலாற நடந்து வந்தார்.
"என்னப்பா...சாப்பிட்டாயா" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.
கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது.என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னார் அந்த ஏழை.
அவர் சொன்ன பதில்
ராஜாவின் மனதை உருக்கியது.
என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம். ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளாரே என்று அவர் அருகில் சென்று அவர் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்பப் பசிக்கிறதா உனக்கு" என்று கேட்க.
குளத்து நீரில்
தலையில் கிரீடம்,
காதில் குண்டலம்,
நெற்றியில் திருநீர்,
முகத்தில் வாஞ்சை
என்று ராஜா தெரிய
திடுக்கிட்டு எழுந்தார் . 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்.
மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினார் . இவரின் படபடப்பைப் பார்த்த ராஜா சத்தமாகச் சிரித்தார்.
'வா...இன்று என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவரைப் பேசவிடாமல் இழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு,
அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்தார். குளித்து, புத்தாடை அணிந்தது வந்தார் . அறுசுவை விருந்து கொடுத்தார்.
சாப்பிட்டு முடித்து அவர் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார்
'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை.
இந்தப் பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாகச் செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
'ஏனப்பா அழுகிறாய்' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா.இந்தத் தருணம் தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னார் .
ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்.
கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டார் .
கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவார் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதார் .
*நமக்கு ஒன்று
கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த
ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.*நம்புங்கள் நடக்கும் . .
ஒரு ராஜா ஒரு கோவிலில்
தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றார்.
அவரைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மைப் பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றார் .
நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவர் தள்ளி நின்றதால் இவருக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவரை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவர் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு, எவ்வளவு போராட்டம், எவ்வளவு இழிசொல், போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே என்று தன் விதியை நொந்துகொண்டார்.
மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தார் . குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தார் .
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்தப் படித்துறையில் காலாற நடந்து வந்தார்.
"என்னப்பா...சாப்பிட்டாயா" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.
கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது.என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னார் அந்த ஏழை.
அவர் சொன்ன பதில்
ராஜாவின் மனதை உருக்கியது.
என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம். ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளாரே என்று அவர் அருகில் சென்று அவர் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்பப் பசிக்கிறதா உனக்கு" என்று கேட்க.
குளத்து நீரில்
தலையில் கிரீடம்,
காதில் குண்டலம்,
நெற்றியில் திருநீர்,
முகத்தில் வாஞ்சை
என்று ராஜா தெரிய
திடுக்கிட்டு எழுந்தார் . 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்.
மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினார் . இவரின் படபடப்பைப் பார்த்த ராஜா சத்தமாகச் சிரித்தார்.
'வா...இன்று என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவரைப் பேசவிடாமல் இழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு,
அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்தார். குளித்து, புத்தாடை அணிந்தது வந்தார் . அறுசுவை விருந்து கொடுத்தார்.
சாப்பிட்டு முடித்து அவர் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார்
'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை.
இந்தப் பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாகச் செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
'ஏனப்பா அழுகிறாய்' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா.இந்தத் தருணம் தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னார் .
ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்.
கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டார் .
கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவார் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதார் .
*நமக்கு ஒன்று
கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த
ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.*

No comments:

Post a Comment