Wednesday 18 October 2023

பெருமையோடு செய்யுங்கள் . .

 பெருமையோடு செய்யுங்கள் . .

வாழ்க்கையில்
இரண்டு விஷயங்களை
என்றும் மறவாதீர்கள்.
ஒன்று
மற்றவர்
உழைப்பில் வாழக் கூடாது,
இரண்டு
மற்றவர்
சிரிக்கும்படி வாழக் கூடாது.
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதீர்கள்.
உங்கள் மனநிறைவுக்காக உங்களுக்குப் பிடித்ததைப் பெருமையோடு செய்யுங்கள்.
யாரையும்
ஏளனமாக நினைக்காதீர்கள்.
எல்லோரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள ஏதேனும் ஒன்று இருக்கும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள் வாழப்போவது
சில காலமே.
*நம் மனம் நல்ல எண்ணங்களால் நிரப்பப்படும் பொழுது
நமக்கு நல்லது மட்டுமே நடக்கும். *
*நம் ஆழ்மனதில் நேர்நிலையான எண்ணங்கள் பதியும் பொழுது அவை நிச்சயம் நிறைவேறும். *
*அதிகாலை நேர்நிலையான வார்த்தைகளை சிறிது நேரம் அமைதியாக சொல்லிக் கொள்வோம். *
*எவ்வளவு நம்பிக்கையுடன் இவற்றை உணர்கிறோமோ அவ்வளவு பலன்கள் நிச்சயம் கிடைக்கும். *
*நம் அனைவர் வாழ்வும் செழிக்கட்டும். *
*நாம் நினைத்தது அனைத்தையும் அடைந்து சிறப்பான வாழ்க்கை பெற இறைவன் துணை நிற்பார். *
*நாம் அனைவரும்
முழுமையான நம்பிக்கையுடன்
இந்த ஒவ்வொரு நாளையும்
தொடங்கப் பழகுவோம். *

No comments:

Post a Comment