கவலைப்பட ஒன்றுமில்லை . .
அது எப்படி
பிரச்சினைகள் வரும் போது
மனதை உற்சாகமாக
வைத்துக் கொள்ள முடியும்
என்று நீங்கள் கேட்கலாம்.
எதையும் நேர்நிலையாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் நம்மால் எந்தச் சூழ்நிலையிலும்
உடைந்துப் போகாமல்
மகிழ்ச்சியாக வாழ முடியும்.
எல்லாவற்றிற்குமே
இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. வாழ்க்கையில் ஒன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் அல்லது நோய் வாய்ப்படுவீர்கள்.
முதலில் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.
இல்லை, உடல் நலக் குறைவு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கும் இரண்டு வாய்ப்புகள் தான். ஒன்று நீங்கள் குணமடைவீர்கள். இல்லையென்றால் நலம் குறைவீர்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்
என்றால் ஏன்
அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
எதிலும் ஒன்று நல்லது
அல்லது கெட்டது நடக்கும்.
நல்லது நடந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை,
கெட்டது நடந்தால் அதிலும் இரண்டு விஷயங்கள்.
இப்படி இருக்க, உங்கள் வாழ்க்கைப் பற்றிய கவலையைத் தூக்கி எறிந்து விட்டு, வாழ்க்கை என்பது
பூங்காவனம் அல்ல போராட்டக்களம் என்பதை உணருங்கள்.
போராட்டக் களத்தில் இழப்புகளும், வெற்றிகளும் சாதாரணம். எதற்கும் கலங்காமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
எப்போதும் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று அதன் போக்கில் உங்களது வாழ்க்கையைச் சிறப்பாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்
என்றால் நீங்கள்
தவறான பாதையில் பயணிக்கிறீர்கள் என்று புரிந்துக் கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் பாதையை மாற்றுங்கள்.
சில சமயங்களில் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை அளிக்கும்.
புதிதாகச் செய்யும் போது தான் உற்சாகம் அதிகரிக்கும்.
அரைத்த மாவையே அரைத்து
நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள்.
உற்சாகமும். மகிழ்ச்சியும்
உங்களுக்குள் தான் இருக்கிறது.
அதை வெளியில் தேடாதீர்கள்.
மற்றவர்களுக்கு
முன்னுதாரணமாக
வாழ்ந்து காட்டுங்கள்.
No comments:
Post a Comment