Saturday 28 October 2023

சிறப்பாக நடைபெற்ற எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார் - ஆத்தங்குடி முத்துப்பட்டணம் கீழவீடு வி எஸ். சிவப்பிரகாசம் செட்டியார் - எஸ். தமிழ்ச்செல்வி ஆச்சி மகள் பொறியாளர் நாச்சம்மை தேவி பூஜா திருமண நிச்சயதார்த்தம். நேற்று மாலை ஆத்தங்குடி முத்துப்பட்டணத்தில் குடமுழுக்கு விழா நாயகர், விகாஸ் ரத்னா டாக்டர் பிச்சை குருக்கள் முன்னிலையில் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தி மகிழ நடைபெற்றது. எங்கள் வாழ்வின் நெகிழ்வான மகிழ்வான தருணமாக இறையருள் மற்றும் எங்கள் பெற்றோர் நல் ஆசியுடன் நடைபெற்றது. நாநயா நிறுவனர் எம் எஸ். முத்துராமன், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் முதன்மை செயல் இயக்குநர் (சிஇஓ) ஸ்ரீ குமார், வயிரவன் கோவில் நிர்வாகக் குழு தலைவர் திட்டாணி, கவிஞர் நெல்லை ஜெயந்தா, எழுத்தாளர் ப. தி௫மலை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறை இணை இயக்குநர் ஆர். பாஸ்கரன், கல்வியாளர் எஸ் எம் கண்ணன், தமிழ்கூறும் நல்லுலகின் மூதறிஞர் புலவர் கி. வேலாயுதன் உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்கள் மற்றும் உறவினர்கள், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள், எங்களது பணிகளுக்கு பெரும் துணையாக உள்ள பண்பாளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். திருமணம் வரும் பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி தங்கம் மகாலில் மற்றும் அன்று மாலை எங்கள் பள்ளத்தூரில் சிறப்பு வரவேற்பு நடைபெறும். வருகை தந்து மனம் திறந்து வாழ்த்திய பெருமக்களை நன்றியோடு வணங்கி மகிழ்கின்றோம். மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் அலமேலு சொக்கலிங்கம் வி எஸ். சிவப்பிரகாசம் செட்டியார் எஸ். தமிழ்ச்செல்வி ஆச்சி

 














































































No comments:

Post a Comment