Saturday 14 October 2023

விருப்பம் நிர்பந்தம் .

 விருப்பம் நிர்பந்தம் . .

*நாம் நினைத்த ஒன்று
நினைத்தபடி நடப்பது
இறைவன் அருள்.
சில நேரங்களில் நடக்காததும் கூட இறைவன் அருள் தான்.*
*"எல்லாம் அவன் செயல்" எனும் போது இதுவும் அவன் செயலே.
இதை எல்லோரும் உணர்வதில்லை. உணர்ந்தவர்கள் இறைவனிடம் . கோபம் கொள்வதில்லை.*
*இதை உணர்ந்து கொள்ளும்
பக்குவம் வந்து விட்டால்
வாழ்க்கை மிகவும் அழகாகும்.*
*இறைவனுக்கு மனதைக் கொடுங்கள். இருப்பவர்களுக்கு அன்பைக் கொடுங்கள்.
இல்லாதவர்களுக்கு
கை கொடுங்கள்.*
*ஒரு புத்தகம்
ஆயிரம்
மனிதனுக்குச் சமம்.*
*இருப்பினும்
அதை எழுதியவன்
ஒரு தனிமனிதனே.*
*ஏளனம் செய்தோரை
எண்ணிக் கலங்காதே.*
*தன்னம்பிக்கையை
இழந்து தடுமாறாதே.*
*உலகம் உன் கையில் தான்
உள்ளது என்பதை மறவாதே.*
*வாழ்ந்து பார்
வாழ்க்கையா நீயா
என்ற போட்டியுடன்.*
*யாரையும் மிகையாகவோ அல்லது குறையாகவோ எடை போடாதீர்கள்.*
மூழ்கடிக்கும் கடலால் கூட*
*#ஒரு துளி*
*எண்ணெய்யை மூழ்கடிக்க முடிவதில்லை.*
*நினைவும், சுமையும் எப்போதும்
ஒன்றாக இருப்பதில்லை.*
*முதலாவது விருப்பம்*
*மற்றொன்று நிர்பந்தம்.*
*எண்ணம் உறுதியாக இருந்தால்* *எண்ணியப்படி உயரலாம்.*
*நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.*
*வாழ்வில் உயர்ந்த லட்சியத்தை ஏற்படுத்தி கொள்.
அதற்காகவே உன்னை மனிதனாக கடவுள் படைத்து இருக்கிறார்.*
*குறிக்கோள் இன்றி வெறுமென வாழ்வதில் அர்த்தமில்லை.*
*வாழ்க்கை
யாருக்கும்
அப்படியே கடந்து விடாது .*
*எண்ணங்களையும்
செயலையும்
மாற்றினாலே அனைத்தும்
தானாக மாறும்.*
*ஒவ்வொரு நொடியும்
உங்களைப் புதுப்பிக்க முடியும்.*
*சில நேரம்
வருமானத்தை
நினைத்து வருந்துகிறோம்
சிக்கனத்தை
மறந்து.*
*இடக்கை தெரியாமல்
வலக்கை கொடுக்கும்
தர்மம் பேரழகானது.*
*ஏனெனில்*
*அதன் பிரதிபலனை
கொடுத்தவரும் எடுத்தவரும் முழுமையாக அனுபவிப்பார்கள். *

No comments:

Post a Comment