Tuesday 17 October 2023

_*"மாற்றம் ஒன்றே மாறாதது.."*

 _*"மாற்றம் ஒன்றே மாறாதது.."*_

_*இரவு பகலாகிறது;
பகல் இரவாகிறது.
கோடை போய் குளிர் வருகிறது;
வறட்சி போய் வெள்ளம் வருகிறது.*_
_பூ காயாகிறது;_ _காய் கனியாகிறது; கனி செடியாகிறது._
_இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்._
_*மாற்றம் மட்டும்தான் நிரந்தரம்.*_ _*அனைத்து உயிரினங்களும்,*_ _*அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கி*_ _*இருக்கின்றன.*_
_*அவை*_ _*நிலையானது என, நம்பப்படுகிறது.*_
_மாற்றம் வரும்போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்._
_*இதை புரிந்து கொண்டால், மாற்றத்தை சந்திக்கும் போது, ஏமாற்றம் அடைய வேண்டி இருக்காது.*_
_‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, வேலையின் தன்மைக்கேற்ப தன்னிடமும் சில மாற்றங்கள் தேவை என்பதை புரிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்._
_*மனம் உவந்து தன்னைத்தானே சூழ்நிலைக்கேற்ப செதுக்கி கொள்ளத் தெரிந்தவரே மகிழ்ச்சியாகவும் திறம்படவும் செயல்பட முடியும்.*_
_மாற்ற முடிந்த செயல்களைத்தான் மாற்ற முடியும்.அதனால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்._
_*பனிக்கரடி ‘குளிருதே குளிருதே..என்ன வாழ்க்கை இது’ என மனம் உடைந்து போகாமல்,அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறதே...*_
_அதே போல நாமும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.. மாற்ற முடிந்ததை மாற்ற முயற்சி செய்யலாம்._
_*மாற்றவே முடியாத செயல்களை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வோம்!’.*_

No comments:

Post a Comment