Tuesday 3 October 2023

பயப்படத் தேவையில்லை .

 பயப்படத் தேவையில்லை . .

*வேண்டியதை அனைத்தையும் இறைவன்
மனிதனுக்கு தந்துவிட்டால்,
மனிதன் வேண்டுதலை மட்டுமே வேலையாகக் கொண்டு இருப்பான்.*
*வாழ்வில் நடக்கும்
ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தில்
ஆண்டவனின் அருள் உண்டு.*
*எல்லாம் முடிந்துவிட்டது என சில நிகழ்வுகளுக்காக வருந்தாதீர்கள். மனிதர்களைத் தாண்டி
பல முடிவுகள் இறைவன் கைகளில் மட்டுமே உள்ளது.*
*இறைவன் உங்களுக்கு கொடுப்பதை எவராலும் தடுக்க இயலாது. உங்களுக்கானதை உரிய காலத்தில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார். நீங்கள் என்றும் இறைவனோடு ஒன்றிருங்கள்.*
*நமது வாழ்க்கை அழகானது*
*ஆனால் போராட்டங்கள் நிறைந்தது*
*போராட்டங்கள்
எதுவும் நிரந்தரமும் இல்லை!*
*போராட்டங்கள்
மட்டுமே வாழ்க்கையும் அல்ல!*
*நமது கடினமான
சூழ்நிலைகள் நிரந்தரமில்லை. *
*தோல்வியும் நிரந்தரமில்லை*
*அவமானங்கள்
எதுவும் நிரந்தரம் இல்லை!*
*கஷ்டங்களும்
கவலைகளும் நிரந்தரம் இல்லை*
*இவை அனைத்துமே
மாறக்கூடியவை.
அனைத்திற்கும் தீர்வு உண்டு.*
*எதைக் கண்டும் பயப்படாதீர்கள்.*
*சில நேரங்களில்
நமது பயமே நமது முதல் எதிரியாகி விடுகிறது.*
*இறைவனை முழுமையாக நம்புபவர்கள் எதற்கும் பயப்படவும் தேவையில்லை.*
*கவலைப்படவும் தேவையில்லை.*
*முழுமையாக இறைவனை நம்புங்கள்.*
*இறைவனால்
தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை .*
*நிறைவேற்ற
முடியாத பிரார்த்தனைகள் இல்லை.*
*மாற்ற முடியாத
சூழ்நிலைகள் இல்லை.*
*நம்பிக்கையோடு இருங்கள்.*

No comments:

Post a Comment