Saturday 7 October 2023

தயங்காமல் முடிவு எடுங்கள்

 தயங்காமல் முடிவு எடுங்கள் . . .

*வாழ்க்கை
அதிர்ஷ்டத்தை தருகிறதோ இல்லையோ
ஒவ்வொரு நாளும் நல்ல
அனுபவத்தைத் தந்து விடுகிறது.*
*போதி மரத்தடியில்
புத்தருக்கு கிடைத்த ஞானம் போல, நமக்கு நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்தே கிடைத்து விடுகிறது.*
*மனம் அழுது கொண்டும் முகம்
சிரித்துக்கொண்டும் தான் நாட்கள் நகருகிறது.*
*யாரெல்லாம்
உண்மையான மனிதர்கள் என்று
இந்த வாழ்க்கை
நம்முடைய துயரத்தின் போதுதான் காண்பிக்கிறது.*
*வாழ்க்கையில்
எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள்.*
ஆனால், அனைத்தும் நிறைவேறும் என்று மட்டும் ஆசைப்படாதீர்கள்.*
*நம்பிக்கை
என்னும் பிடியில் நீ இருக்கும் வரை வெற்றி என்னும் ஓடை உனக்காகத் திறந்திருக்கும். *
*மனதில்
தூய்மையற்ற சிந்தனை
நுழைய அனுமதிக்காதீர்கள்.*
*இல்லாவிட்டால், இதயத் திரையில் கறை படிந்து விடும். நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள்.*
*நல்லதை மட்டும்
எப்போதும் காண முயலுங்கள்.*
*வாழ்க்கையில்
விலை மதிக்க முடியாத அனுபவங்களையும்,
பாடங்களையும்*
*நமக்கு கற்றுக் கொடுப்பது பள்ளிக்கூடங்களோ,
கல்லூரிகளோ அல்ல.*
*பணம் இல்லா வாழ்க்கையும்,
பசித்த வயிறும் ,
உடைந்த மனமும் தான்.*
*உங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இருங்கள்.*
*ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.*
*எண்ணம் போல வாழ்க்கை. *
*வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாத செயல்கள் குறி தவறிட அதிக வாய்ப்புண்டு.*
*எதையும் ஒரு குறிக்கோளோடு செயல்படுத்த முற்படுங்கள்
வெற்றி நிச்சயம்.*
*நிம்மதி
என்கிற ஒன்று உலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் கிடைக்காது.*
*ஆசைகளைக்
குறைத்து கொண்டு தேடினால்
நமக்குள் நிம்மதி இருக்கிறது
என்பதை உணரலாம்.*
*தயங்காமல் முடிவு எடுக்கும்
வரை உங்கள் வாழ்க்கையை*
*யாரோ ஒருவர், தன் சுயத்திற்காக
விளையாடிக் கொண்டிருக்கும்
திடலாகத் தான் இருக்கும்.*
*நல்லதை யார் சொல்கிறார்கள்
என்பது முக்கியமில்லை*
*எதற்காகச் சொல்கிறார்கள்,
எப்படி சொல்கிறார்கள்,
ஏன் சொல்கிறார்கள்
என்பதை உணர்ந்தால்*
*சொல்பவரை விட
கேட்பவருக்கு நன்மை அதிகம். *
*அனைத்து செல்வங்களையும்
கொடுத்த இறைவன்
அவற்றை அழிப்பதற்காகவே
மனிதர்களுக்கு ஆணவத்தையும்
கொடுத்தார்.*

No comments:

Post a Comment