Wednesday 19 April 2023

பூக்கள் மீண்டும் மலரும்.

 பூக்கள் மீண்டும் மலரும்.

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பும் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையும் திரும்பி வாரா என்பார்கள்.
வில்லிலிருந்து புறப்பட்டுப் போன அம்பைத் தேடிக்
கண்டுபிடித்துவிட முடியும்.
ஒரு தவறான வார்த்தையைச் சொல்லி விடுகிறோம். அதனால் சிலருக்கு கோபம் உண்டாகிறது. அந்த வார்த்தையை நாம் திரும்பிப் பெற்றுக்கொள்வதாய்ச் சொன்னால் அவர்கள் கோபம் தணிந்து விடுகிறது.
போன வசந்தத்தில் பூத்து உதிர்ந்து போன பூக்களுக்காக நாம் புலம்ப வேண்டியதில்லை.
மீண்டும் வசந்தம் வரும்.
மீண்டும் பூக்கள் மலரும்.
கடலில் கலந்துவிட்ட நதி கூட மேகமாகி மழையாகி மீண்டும் நதியாகிக் திரும்பிக் கடலுக்கே
வந்து விடுகிறது.
பணத்தை இழந்தாலும் மீண்டும் சம்பாதித்துவிட முடியும். நம் வாழ்க்கையில் போனால் திரும்பி வராதது ஒன்று உண்டு.
*அதுதான் காலம்.*
*காலம் போனால் திரும்ப வராது என்பது உண்மை. எனவே, வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்,
முடிந்தவரை புத்தகங்களைப் படியுங்கள், முடிந்தவரை பயணம் செய்யுங்கள், ஏனென்றால் நீங்கள் ஓய்வுபெற்று முதுமை அடைந்தவுடன் நீங்கள் பெரும்பாலும் நினைவுகளுடன் வாழ்கிறீர்கள், நினைவுகளை இன்னும் "மறக்க முடியாத இனிய
நினைவுகளாக" ஆக்குங்கள்.*

No comments:

Post a Comment