Wednesday 12 April 2023

இருட்டில் நிழல் கூட தொடராது.

 இருட்டில் நிழல் கூட தொடராது.

அனைவரிடமும் காலத்தைச் சொல்லும் கடிகாரங்கள் உள்ளது. சில கடிகாரங்கள் பின்னோக்கிச் செல்லும், அதற்குப் பெயர் ஞாபகம். சில கடிகாரங்கள் முன்னோக்கிச் செல்லும் அதற்குப் பெயர் கனவுகள்.
ஒரு வீடு எத்தனை பெரியது என்பது முக்கியமல்ல, அந்த வீட்டில் எத்தனை சந்தோஷம் இருக்கிறது என்பதே முக்கியம்..
அனைவரும் தவறுகள் தான் வெற்றிக்கு முதல் படி என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அந்தத் தவறை திருத்திக் கொள்வதே வெற்றிக்கு முதல் படி ஆகும்.
சாதாரண மனிதர்கள்
நினைப்பது வாழ்க்கையில் இருப்பது இரண்டுதான். ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி என்று,. வெற்றி பெற்றவர்களுக்குத் தான் தெரியும் நான்கு தோல்விகளுக்குப் பிறகு கிடைப்பதே வெற்றி என்று.
இலக்கிலிருந்து கண்களை எடுக்கவே எடுக்காதே.
தோல்வி என்ற எண்ணத்தை விட பயம் தான் எத்தனையோ கனவுகளை கொல்கிறது.
உங்களைப் பின் தொடர்பவர்கள் அனைவரும் உங்கள் விசிறிகள் அல்ல.
சுவர்களும், தடுப்புகளும், உங்கள் தோல்விக்காக ஏற்பட்டதல்ல. ஒரு விஷயம் உங்களுக்கு எத்தனை தேவைப்படுகிறது என்று அறிந்து கொள்வதற்காகவே சுவர்களும் தடுப்புகளும் இருக்கிறது.
உங்கள் வாழ்க்கை மாறுவதற்கு அதிர்ஷ்டம் ஒரு காரணமல்ல. மாற்றமே உங்கள் வாழ்க்கையின் மாற்றத்திற்கான காரணம்.
உங்கள் வாழ்க்கையை ஒரே ஒருவரால் தான் மாற்ற முடியும். அது நீங்கள்.
வெற்றி உங்களைத் தேடி வராது. நீங்கள்தான் வெற்றியைத் தேடி செல்ல வேண்டும்.
அனைத்துமே முடிவிலேயே சரியாகத்தான் இருக்கும். அது சரியாக இல்லை எனில் அது முடிவல்ல.
வெற்றிக் கனியை பறிக்க லிஃப்ட் என்பது இல்லை.மாடிப்படிகளில் ஏறிச் சென்றுதான் நீங்கள் ப றிக்க வேண்டும்.
தோல்வி என்பது மிகப்பெரிய தோல்வியே அல்ல. முயற்சி செய்யாதது தான் மிகப் பெரிய தோல்வி.
உலகத்தில் யார் ஒருவர் மீதும் அதிகமான நம்பிக்கை வைக்காதீர்கள். ஏனெனில் இருட்டிலே உங்கள் நிழல் கூட உங்களைப் பின் தொடராது.
ஒவ்வொரு ஆசானும் ஒரு காலத்தில் மாணவனாகத் தான் இருந்தார். வெற்றி பெற்ற அனைவரும் ஒரு காலத்தில் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் அனைவருமே கல்வி என்ற பாலத்தைக் கடந்து வந்துள்ளனர்.
ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்குச் சமமானது. ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்குச் சமமானவன்.

No comments:

Post a Comment