Monday 17 April 2023

உண்மை உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.

 உண்மை உள்ளத்தில்

இருந்து வர வேண்டும்.
*இந்த உலகத்தில்
வேரில்லாமலும்.
நீரில்லாமலும் வளரக்கூடிய
ஒரே செடி ஆசைதான்.*
*ஆசைகள் ஓட்டை வாளி போல, எப்போதும் நிறைவு செய்ய முடியாது.*
*என் மீது அளவோடு ஆசை வைத்தால் நிம்மதியாக வாழ வைப்பேன்.*
*அளவுக்கு அதிகமாக ஆசை வைத்தால் நிம்மதியைத் தேட வைப்பேன்.
இப்படிக்குப் பணம்.*
*பசிக்கு உணவைத் தேடும் வரை ஆரோக்கியமாகத் தான் இருந்தோம். ஆடம்பத்திற்குப் பணத்தைத் தேட ஆரம்பித்தபோது தான் சீரழிந்தோம்.*
*வாழ்வில் நாம் நாமாக வாழ செலவு மிகவும் குறைவு.*
*மற்றவர்களைப் போல*
*வாழத்தான் செலவு அதிகம்.*
*பேனாவின் முனையில் இருந்தா கதைகள் பிறக்கின்றன*
*எழுத்தாளரின் எண்ணத்தில் இருந்து வந்ததால் தான் கதைகள் பிறக்கின்றன..*
*உதட்டின் அளவில் பேசுபவை எல்லாம் உண்மையாகுமா *
*உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருபவை தான்,
உண்மையாக இருக்கும்.
*உண்மையோடு செயல்படுங்கள் *

No comments:

Post a Comment