உணருங்கள் நம்புங்கள்.
நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது.
முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவே பறவைகள் கூடுகளை
கட்டத் தொடங்குகின்றன.
ஆனால் என்ன நடக்கிறது என்பதை
தெரிந்து கொள்ளாமலேயே
பறவை செய்து கொண்டிருக்கிறது.
யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள்.
அதனை இயற்கை என்று அழையுங்கள்;
கடவுள் என்கிற வார்த்தை ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காவிட்டால்
அதனை இயற்கை என்று அழையுங்கள்.
இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.
இரண்டும் ஒன்றுதான்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி.
விஷயங்கள் அனைத்தும்
கவனிக்கப்படுகின்றன.
பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை,
எதற்காக இந்தத் திட்டமிடுதல்
பிறகு எதற்காக இந்தப் பரபரப்பு,
பிறகு எதற்காக இந்த வருத்தம்,
பொறுமையாக இருங்கள்.
காத்திருங்கள், நம்புங்கள், உணருங்கள்.
பார்வைக்குப் புலப்படாத சக்தி ஒன்று உங்களைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது.
அந்த சக்தியை நீங்கள் கடவுள் என்றாலும் சரி இயற்கை என்றாலும் சரி ஆனால் மனிதனை மீறிய ஏதோ ஒன்று இருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
No comments:
Post a Comment