செங்கல்பட்டு எம் எல் எம் திருமண மகால் திறப்பு விழா.
இன்று காலை தேவகோட்டை எம் எல் எம் . சுந்தரம் செங்கல்பட்டு மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டியுள்ள எம் எல் எம் திருமண மகால் ஏசி யை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் திறந்து வைத்தார்.
கமலா சினிமாஸ் உரிமையாளர் வி என் சிடி. வள்ளியப்பன், ராஜ் டிவி இயக்குநர் டாக்டர் எம். ரவீந்திரன், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர
மேலாண்மைக் கழகத்தின் மேனாள் தலைவர் லேனா. காசிநாதன் வாழ்த்துரை வழங்கினர்.
அம்பத்தூர் மகளிர் சங்கத் தலைவி வள்ளி பழனியப்பன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக அதிகாலை பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள் குழுவினர் கணபதி ஹோமம் நடந்தது.
ஏஆர். எம். லெட்சுமணன் செட்டியார், எம் எல் எம். சுந்தரம், எம். விசாலாட்சி, எம். வெங்கடேஷ், எம். அருணாசலம், ஏ. வசந்தா, ஏ. ஷ்ரவன் நாராயணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment