Monday 17 April 2023

புதிய தலைமைக்கு பிள்ளையார் சுழி மதுரை நகரத்தார் சங்கத்தின் அடுத்த நிர்வாகக் குழு தேர்வாகும் நேரம் நெருங்கி வருகின்றது. அதன் தலைவராகப் பணியாற்றிட களம் காண்கின்றார் அன்புச் சகோதரர் பாகனேரி ராம. வயிரவன். மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் முதுநிலைத் துணைத் தலைவர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் நிர்வாகி, இந்தியன் வங்கியில் முதுநிலை மேலாளர் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர், வயிரவன் கோவில் முன்னோடி, நிதி மேலாண்மையாளர், மதுரை விளாங்குடி கணபதி நகர் குடியிருப்போர் சங்கத்தின் ஆற்றல் மிக்க தலைவர். மீண்டும் மதுரையில் சிறந்த தலைமைப் பண்பும், கம்பீரம் மிக்க, செழிப்பான, அனைவரையும் நன்கறிந்த ஒருவர் வருவது பாராட்டுக்குரியது. இன்று காலை மதுரை திருநகரில் உள்ள மனிதத்தேனீ இல்லத்தில் சந்தித்து மகிழ்ந்த இனிய வேளை. உடன் அவரது தம்பி, பன்முகப் பேராற்றல் மிக்க ராம. ஆனந்தன் உள்ளார். அவரது முயற்சிக்கு நமது முழு ஆதரவும், பேரன்பும், வாழ்த்தும்.


 

No comments:

Post a Comment