Tuesday 25 April 2023

வாழிய பல்லாண்டு

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 71 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆங்கிலத் துறை தலைவர், கானாடுகாத்தான் நேமம் கோவில் நலச் சங்கத் தலைவர், ஏழு புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர், காசி சத்திர திருத்தேர் பணிக்கு துணை நின்றவர், இன்றைய தமிழக அரசின் கல்வித் துறைக்கு வழிகாட்டி, ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவர், நேமம் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா துணைச் செயலாளர் பணியாற்றிய அறப்பணியாளர், பெருங் கொடையாளர் என நாளும் நற்றமிழுக்கு உழைப்பவர்
பேராசிரியர் கதி. பழனியப்பன்.
இவரது இல்லத்தரசியார் மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் வள்ளியம்மை ஆச்சி என்பது கூடுதல் சிறப்பு.
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு 24.04.2023


No comments:

Post a Comment