Thursday 13 April 2023

விதையாக எழுங்கள்.

 விதையாக எழுங்கள்.

பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும்,
வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும்
காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.
ஒருவர் இப்படித்தான் என முடிவான பிறகு, அவர்களை மாற்ற முயற்சிக்காமல் உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.
யாருடைய நிழலுக்குள்ளும் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளாதிருக்கும் வரை, வெயில் உங்களைச் சுடுவதில்லை.
பேசுவது திறமை அல்ல. தனது பேச்சால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராமல் பேசுவதே திறமை.
கோபத்தில் ஒருமுறை விட்ட வார்த்தைகளை மறுமுறை சரி செய்ய முடியாது. அப்படி முயன்றால் அது ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதற்குச் சமம்.
நல்ல புரிதல் உள்ளவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. புரியாதவர்களுக்கு எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை.
எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுத் தர நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்று கற்றுத்தர வாழ்க்கை மட்டுமே இருக்கின்றது.
நல்லதைக் கூட சில இடங்களில் பேசாமல் இருப்பதே நல்லது.

No comments:

Post a Comment