Saturday 5 March 2022

கும்பகோணம்: `ஆட்டோ டிரைவர் டு மேயர் - நெகிழும் குடும்பத்தினர்...! யார் இந்த சரவணன், பின்னணி என்ன?

 கும்பகோணம்:

`ஆட்டோ டிரைவர் டு மேயர்'
- நெகிழும் குடும்பத்தினர்...!
யார் இந்த சரவணன், பின்னணி என்ன?
கும்பகோணம் மாகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 42 வார்டுகளை கைப்பற்றின...
இதில் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டு பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக 11-வது வார்டில் போட்டியிட்ட அய்யப்பன், 17-வது வார்டில் போடியிட்ட சரவணன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
தி.மு.க-வுக்கே மேயர் பதவி என அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பல மேயர் சீட்டைப் பிடிக்க போட்டியிட்டு வந்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் கும்பகோணம் மேயர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கழகத்தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் ஒதுக்கியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற சரவணன், அய்யப்பன் இருவரின் பயோடேட்டாவையும் காங்கிரஸ் கட்சித் தலைமை கேட்டு பெற்றிருந்தது...
இந்த நிலையில், சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்...
20 வருடங்களாக ஆட்டோ டிரைவராக இருந்துவரும் ஒருவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை பலரும் வரவேற்கின்றனர்..
சரவணன் மனைவி தேவி ``எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நாங்க வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். என் கணவர் சரவணன் முதலில் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த ஏழு வருடங்களாக சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். பாரம்பர்யமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது எங்க குடும்பம். என் கணவரின் தாத்தா குமாரசாமி கும்பகோணம் நகராட்சியில் கவுன்சிலராக இருந்தவர்...
முதன் முறையாக இந்த தேர்தலில்தான் என் கணவர் போட்டியிட்டதுடன், வெற்றியும் பெற்றார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மேயர் சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், என் கணவர் சரவணனுக்கு மேயர் சீட் வழங்கியுள்ளனர்...
எளிய குடும்பத்தைச் சேர்ந்த என் கணவருக்கு ஆட்டோ ஓட்டுவதுதான் முக்கிய தொழில்...
அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம்...
அப்படிப்பட்ட எங்களுக்கு மேயர் பதவிக்கான சீட் வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல, தி.மு.க- தலைவர் தளபதி அவ்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். மறைமுகத் தேர்தலுக்குப் பிறகு ஆட்டோ டிரைவரான என் கணவர் சரவணன் மேயராக பொறுப்பேற்க இருப்பதை நினைக்கும் போதே பெரும் நெகிழ்ச்சி ஏற்படுகிறது" என தெரிவித்தார்.
நன்றி ஒய். பழனியப்பன்

No comments:

Post a Comment