Wednesday 16 March 2022

எளிய வழியில் வெற்றி வசமாகும்.

 எளிய வழியில் வெற்றி வசமாகும்.

நிதானம் தவறும் போதெல்லாம் ஒன்றைமட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
வார்த்தைகள் கூர்மையானது , நம்மை எப்போதும் சிதைக்கக் கூடும்.
ஒருவனின் மனம் துய்மையாக இல்லை என்றால், பணமாக இருந்தாலும் சரி, பலமாக இருந்தாலும் சரி.. அது அவனுக்குப் பலன் தராது.
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலை வராது..
நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது..
நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
ஏமாற்றம் தோல்வியின் முதல் படியில்லை, அது வெற்றியின் ஆரம்ப நிலை.
கொட்டும் தேனீக்களைத் தாண்டித்தான் சுவைமிகுந்த தேன் உண்டு…!
கடினமான வலிகளைத் தாண்டி தான் வாழ்வில் வெற்றி உண்டு..!”
மறக்கக் கற்றுக்கொள்,
மன்னிக்க கற்றுக் கொள்வாய்..!
மன்னிக்க கற்றுக் கொள், கோபப்படாமல் இருக்க கற்றுக்கொள்வாய்..!
கோபப்படாமல் இருக்க கற்றுக்கொள், பொறுமையாக இருக்க கற்றுக் கொள்வாய்..!
பொறுமையாக இருக்க கற்றுக் கொள், அனைத்து பிரச்சனைகளும் எளிமையாக போய்விடும்.
உனக்கு துரோகம் இழைத்தவர்களை நீ பழி வாங்காதே.
அதை காலத்திடம் ஒப்படைத்து விட்டு நீ அமைதியாக இரு.
ஏனென்றால் காலம் போல் மிகக் கொடூரமாய் பழிவாங்க உலகில் யாராலும் முடியாது.
சொற்களில் வலிமையை உணர்ந்தால் யாரிடமும் வார்த்தைகளை விடமாட்டீர்கள்.
குழந்தை போல மனமிருந்தால் ௭தற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை!
உலகம் ௭ன்பது ௭ன்னவென்று தெரியாத வயது தான்! உண்மையில் மகிழ்ச்சி நிறைந்தாக இருக்கிறது.

No comments:

Post a Comment