Tuesday 29 March 2022

எல்லையைத் தொடும் துணிவு

 எல்லையைத் தொடும் துணிவு

ஆத்திரத்திற்கு இடம் கொடுத்தால் மனம் பாழ்பட்டு போகும். நிதானம் தவறாமல் இருக்க வேண்டுமானால் நியாயமான கோபத்திற்கு கூட அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.
பரபரப்பும், பதற்றமும், பணிவையும், துணிவையும் உண்டாக்காது.
அப்படிப்பட்ட மனிதன் வலிமை மிக்கவனாக விளங்க முடியாது .
நாம் வாழ்க்கையில் உயர்ந்து முன்னேற வேண்டும் என்றால்,பணிவும், துணிவும் கொண்டு செயல்பட வேண்டும். இதுதான் நம்மை வெற்றி பெற வைக்கும்.
ஆம் நண்பர்களே
உயர்வுக்குத் துணையாக இருப்பது பணிவும், துணிவும். கோழைத்தனம் கூடாது. கர்வம் ஆகாது.
பணிவு பக்குவத்தை உண்டாக்கும். துணிவு எல்லையைத் தொடுகின்ற வல்லமையைத் தரும்.
பணிவும், துணிவும் இணைந்தால் சிறப்பாக நம் வாழ்வு அமையும்.

No comments:

Post a Comment