Monday 21 March 2022

192 மனைகளுடன் சங்கத் தமிழ் நகர் தொடக்க விழாவில் ஐம்பது சதம் மனைகள் விற்றுச் சாதனை.

















 192 மனைகளுடன்

சங்கத் தமிழ் நகர் தொடக்க விழாவில்
ஐம்பது சதம் மனைகள்
விற்றுச் சாதனை.
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தினமலர் கல்லூரி மற்றும் சூப்பர் கேஸ் அருகில் (பாரபத்தி பெரிய கூடக்கோவில்) உள்ள ஆனந்தம் ரியல்டார்ஸ் ரியல் எஸ்டேட் புரமோட்டர்ஸின் சங்கத் தமிழ் நகர் மனைப் பிரிவுகள் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
முழுவதும் அழகிய தார் சாலைகள், 35 அடியில் குடிநீர், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி அப்ரூவல் லே அவுட் என முழு குடியிருப்பு வளாகம் உருவாக உள்ளது.
இதனை விஷால் நிறுவனங்களின் சேர்மன் பொறியாளர்
ஆர். இளங்கோவன்
திறந்து வைத்து வாழ்த்தினார்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
குடும்பங்களின் மகிழ்ச்சி என்ற தலைப்பில் ஐம்பது நிமிடங்கள் சிறப்புரை ஆற்றுகையில் சொந்த வீட்டில் வசிப்பது ஆனந்தமான நிலை.
நம்பகத்தன்மை, தொழில் சார்ந்த மனை விற்பனை மற்றும் கட்டிடக் கலையில் கால் நூற்றாண்டுகால அனுபவம் என இதன் இயக்குனர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் என்றார்.
இதன் பங்குதாரர் அண்ணாமலையார் பில்டர்ஸ்
எம். அழகப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பங்குதாரர்கள் கிளாசிக் புரமோட்டர்ஸ் வி. சித்தரஞ்சன் தாஸ் மற்றும் கோபுரம் புரமோட்டர்ஸ்
பி. மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
விழாவில் எச் டி எப் சி ஹோம் லோன் நிறுவன மேலாளர் என். பாலமுரளி கிருஷ்ணன், எல் ஐ சி ஹோம் லோன் நிறுவன நாசர், ட்ரூ வேல்யூ நிறுவன உரிமையாளர் வேல்முருகன், ஜெயண்ட் ஜெயச்சந்திரன், லியோ ஹவுசிங் நிறுவனம் மூர்த்தி, கருப்பாயூரணி அரசு, மதுரை நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர் வி. வயிரவன், செயலாளர் ஆர். மெய்யப்பன், மேனாள் உதவிச் செயலாளர் அப்பல்லோ ஒய். கார்த்திக், மேக்ஸ் ராமகிருஷ்ணன், ஏபிஆர் அண்ணாமலை, ராஜன் கிரோ பாரதி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் அழகு பாண்டி, கருணாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர்.
தொடக்க நாளான இன்று ஐம்பது சதம் இடங்கள் முன்பதிவு செய்யப்பட்டது புதிய வரலாறு.
வருகை தந்த அனைவருக்கும் மிகச் சிறந்த அசைவம் மற்றும் சைவ உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
வாழிய தொழில் மேன்மை.

No comments:

Post a Comment