Tuesday 22 March 2022

உயர்ந்த மனநிலை.

உயர்ந்த மனநிலை.
இன்றைய உலகில் நல்ல எண்ணமும், தியாக உணர்வும் உள்ளவர்கள் தங்களை வெளிஉலகத்துக்குத் காட்டிக்கிறது இல்லை.
நமக்காகத் தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு;
நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு!
மகன் மகிழ்ச்சிக்காக தனிக் குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்; மகள் மகிழ்ச்சியாக வாழக் கடன் பட்டும்கூடஎல்லா வசதிகளும் செய்யும் பெற்றோர்களும், சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!
சில சமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத்
தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!!
ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்தது.ரொம்ப தூரத்தில இருந்து பறந்து வந்த குருவி ஒன்று முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,
இண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டை இட்டு குஞ்சு பொறிச்சிக்கிட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது'னு சொல்லி விட்டது...
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக் குருவி. 'இடம் தானே....தாராளமா இருந்துக்கோ!'னு பெரிய மனசு பண்ணிச்சு அந்த மரம்.
ஒரேமாசம்தான்.. ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் ஆற்றில் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது...
ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த இண்டாவது ஆல மரம் நிலையா நிலைச்சு நின்னது...
முதல் ஆலமரத்தைப் பார்த்து குருவி,
'துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கு கடைசியில் இந்த நிலைதான் ஏற்படும் என்று எல்லோரும் எண்ணுவதுபோல குருவியும் நினைச்சது..
ஆனால்,வெள்ளத்துல அடிச்சிட்டு போகும் அந்த முதல் ஆலமரம் குருவியைப் பார்த்து,
''என் வேரோட பலம் ஒரு மழைக்குக் கூட தாங்காது என்று எனக்கு நன்கு தெரியும்...
நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் என்ற நல்ல எண்ணத்தில்தான் உனக்கு இடம் தர மறுத்துட்டேன்... என்னை மன்னித்து விடு குருவியே..
ஆனாலும் நீ எங்கு இருந்தாலும் உன் குடும்பத்தோட மகிழ்ச்சியுடன் நல்லா இருக்கணும்!' என்று சொல்லி ஆற்றில் சென்றது..
ஆம் நண்பர்களே
பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்ட, எண்ணம் உடையவர்கள் தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது.

No comments:

Post a Comment