Tuesday 15 March 2022

கற்றுத் தரும் வாழ்க்கை.

 கற்றுத் தரும் வாழ்க்கை.

சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் இயல்பு...
1000 புத்தகத்தைப் படித்திருப்பார்கள்,500 சொற்பொழிவுகளைக் கேட்டு இருப்பார்கள், ஆனால், இன்னும் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டே இருப்பார்கள்.
ஒரு 10 நிமிடம் இவங்களால நிதானமாகப் பேசக் கூட முடியாது, நிற்காமல் தேடிக்கிட்டே இருப்பார்கள்...
இவர்கள் படித்த புத்தகத்தில் இருந்த செய்திகளை, இவர்கள் கேட்ட நிகழ்வுகள் பற்றி கூட இருக்கிறவர்களின் இடத்தில், இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும், அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும், அந்த மகான் இப்படிச் சொன்னாரு, இவரு இப்படிச் சொன்னார், என எதையாவது சொல்லிக் கிட்டே இருப்பார்கள்...
இது ஒரு புறம் இருக்க..,
நம்மில் பலர் வாழ்க்கையில நடக்கிற செயல்களுக்கு அடுத்தவங்க மேல பழி போடுவதைப் பார்க்கின்றோம்.,
இன்னும் சிலர் நல்ல நேரம் வரவில்லை என்று சொல்லி , அவர்களை அவர்களே ஆறுதல்படுத்திக் கொள்கின்றார்கள்...
உண்மையில் உலகத்தில் தலை சிறந்த ஆசிரியர் யார்? நம் வாழ்க்கை தான் மிக சிறந்த ஆசிரியர்.. வாழ்க்கை கற்றுத் தராத பாடத்தையா? மற்றவர்கள் கற்றுத் தரப் போகின்றார்கள்.?..
நமக்குத் தெரியுதோ, தெரியலையோ வாழ்க்கை நமக்கு எதையாவது ஒரு செய்தியைச் சொல்லிக் கொடுத்துக் கிட்டே தான் இருக்கு.
நாம் தான் வாழ்க்கை சொல்லித் தரும் பலவற்றைக் கற்றுக் கொள்வதில்லை
சொல்லப் போனால் நம்ம வாழ்க்கையிலே என்ன நடந்தது,நடந்து கொண்டு இருக்கிறது ,,என்ன நடக்கப் போகிறது என்று கவனிப்பதே இல்லை.
அடுத்தவர்களின் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு என்று பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது..ஆனால், நம் வாழ்க்கையிலே என்ன நடக்குதுன்னு என்று நாம் பார்ப்பதில்லை..
வாழ்க்கை என்றால் என்ன ? நிகழ்வுகளின் தொகுப்புத் தான் வாழ்க்கை..
அப்போ நிகழ்வுகள்? நம்ம எடுக்கிற முடிவுகள் தான் நிகழ்வுகள் (நிகழ்ச்சிகள்)..
ஆம் நண்பர்களே
நம் வாழ்கை என்பது நம்மைச் சுற்றி நாம் எடுக்கற முடிவுகள் தான்.
உண்மையைச் சொன்னால் நாம் தான் நமக்குத் தலைவன், எல்லாமே நாம் தான்.
நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடிவும் தான் உங்கள் வாழ்க்கை எப்படிப் பயணிக்கிறது என்று முடிவு செய்கிறது.
வாழ்க்கையோட நிதர்சனமான உண்மையும் இது தான்.

No comments:

Post a Comment