Saturday 5 March 2022

தமிழருவி மணியன் அவர்களின் 20 ஆவது நூல் அறிமுக விழா.

 தமிழருவி மணியன் அவர்களின்

20 ஆவது நூல் அறிமுக விழா.
இன்று மாலை மதுரையில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் அதன் அலுவலகத்தில் நடைபெற்ற காந்திய மக்கள் இயக்க நிறுவனர், இலக்கிய வேந்தர்
தமிழருவி மணியன்
அவர்களின் 20 ஆவது நூலான வாழ்வே ஒரு மந்திரம்
நூல் அறிமுக விழா நடைபெற்றது.
பொருளாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார், தியாக தீபம் அ. பாலு,
பி. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நூலினை அறிமுகம் செய்து பேசினார். முதல் படியை வ. உ. சி. இலக்கியப் பேரவை நிறுவனர் எக்சலன்ட் ஏ. ஹரிமாதவன் பெற்றுக் கொண்டார்.
காந்திய மக்கள் இயக்க முன்னோடி
எம். கோவிந்தராஜ் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
செயற்குழு உறுப்பினர் கனகமகால்
ரெ. கார்த்திகேயன் நன்றி கூறினார்.
வளரும் தலைமுறைக்கும் வளர்ந்த தலைமுறைக்கும் வழிகாட்டும் சிறந்த நூல் இது.


No comments:

Post a Comment