பாராட்டி மகிழ்வோம்.
நம் சமூக வைரவன் கோவிலைச் சேர்ந்த தெய்வத்திரு மெய்யப்ப செட்டியார் புதல்வர் திரு. M. லக்ஷ்மணன் - திருமதி அபிராம சுந்தரி தம்பதிகளின் புதல்வி
செல்வி. L. ஸ்ருதி லக்ஷ்மி அவர்கள் தன் மேற் படிப்பினை( U.P) உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய விமான பல்கலைக்கழகத்தில் விமான ஊர்தி பைலட் படிப்பினை(BMS civil aviation) மேற்கோள்ள நேற்று காரைக்குடியில் இருந்து புறப்பட்டார்.
நகரத்தார் சமூகத்தில் இருந்து தற்போது இப் படிப்பினைப் பயிலும் ஒரே பெண் ஆவார் என கருதப்படுகிறது.
தந்தை திரு M. லக்ஷ்மணன் காரைக்குடி SMSV ஆண்கள் பள்ளியில் கணித ஆசிரியர் ஆவார். இவர் சகோதரர் திரு.M ராமன் ஆவார்.
செல்வி. L.லக்ஷ்மி ஸ்ருதி அவர்களை பள்ளி ஆசிரியர்கள்,நண்பர்கள் நேற்று வழி அனுப்பி வைத்தனர்..
பாராட்டி மகிழும் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment