Tuesday 24 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*வெளிநாட்டு வாசி ஊருக்கு வரும்பொழுது*
"நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன்
ஏ வந்தீங்க, சரி ஆஸ்பத்திரிக்கு போயிருங்க, ஊரே நேத்து கூடி சொல்லிட்டு போச்சி, ஊருக்குள்ள வந்தா எங்களையும் விலக்கி வச்சுருவாங்க,, நீங்க ஆஸ்பத்திரிக்கு போங்க இன்னும் வெளிநாட்டுல இருக்குறதா நினைச்சிக்குறோம்
ஏ பாட்டி உன் பேத்திக்கு வாட்ச்..
கிறுக்கு பயலே , எதுக்கு வாட்ச பாத்துட்டே சாகவா? வீட்டு பக்கம் வந்தா கைய கால உடைச்சிருவேன்
அந்த தலைவலி தைலம்..
எனக்கு ஒரு குறை இல்ல கண்ணு... உன் பாசம் போதும் அப்படியே ஆஸ்பத்திரிக்கு போயிருப்பா
மாமா நல்லாயிருக்கீங்ளா?
இதுவரை நல்லாருந்தோம் நீ வந்து பார்காமல் இருந்தா இன்னும் நல்லாருப்போம்
சித்தப்பா
சித்தப்பா கிழிச்சாரு ஓடிரு...
அந்த சொத்து விவகாரம்?
அது அப்படியே கிடக்கட்டும், நீ இந்தபக்கம் வந்த கொன்னுருவேன் அப்புறம் எனக்கு மட்டும்தான் சொத்து
மாம்ஸ் பாட்டில்..
நீ அந்த மரத்தடில வச்சிட்டு போ, 14 நாள் கழிச்சி எடுக்கலாம் ஒரு பயலும் எடுக்கமாட்டான் மாப்ள
அண்ணே சிகரெட்
மண்வெட்டியால மண்டைய பொளந்திருவேன், நீ சம்பாதிச்சிட்ட இங்க உசுராவது மிஞ்சணுமில்ல‌
இல்லண்ணே உங்க தம்பிக்கு விசா
ஆள விடுசாமி, உங்க சகவாசமே வேண்டாம்..
ஒரு பையன் அமெர்ரிக்காவுல இருக்கான் உங்க மகளுக்கு
இருக்கட்டும், உன்கிட்ட நாயா கேட்டுச்சி... போய்யா
இன்னார் மவன் வந்துட்டான்
அந்த குடும்பத்த விலக்கி வைங்க,
கோயில்ல விடாதீக,
பால்காரன் காய்கறிகாரன்கிட்ட சொல்லுங்க.
ஊரை அழிக்க வந்துட்டான்...."
*அரசு உடனே செய்யவேண்டியது இனி வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு விமான நிலையம் அகதி முகாம் அமைப்பது, நிலமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது*

No comments:

Post a Comment