Thursday 12 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தேவகோட்டையில் நடைபெற்ற நெகிழ்வான விழா...
மனிதப் புனிதர் திரு AL.AR S இராமகிருஷ்ணன் அவர்களுக்கு, அவர்கள் படிக்க வைத்த பிள்ளைகளில் நல்ல நிலையை அடைந்த பிள்ளைகள் “ ஐயாவைக் கொண்டாடுவோம்” என்னும் ஒரு நிகழ்வை 8-3-2020 அன்று தேவகோட்டை இராம ஏகம்மை மண்டபத்தில் நிகழ்த்தினார்கள். ஐயா , பிள்ளைகளோடு அதிக நேரம் சிலவு செய்யவேண்டும என்பதால் பொது வெளியில் மிகமிகக் குறைந்தவர்களே அழைக்கப்பட்டிருந்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் வ. தேனப்பன் “வேரைக் கொண்டாடும் விழுதுகள்” எனும் தலைப்பில் உரை நிகழ்ந்தினார்கள். மருத்துவர் திருமதி பொற்செல்வி மூர்த்தி அவர்களின் தலைமையில் ஐயா படிக்கவைத்த 4 மருத்துவக் குழந்தைகள் பங்கேற்ற மருத்துவ விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கமும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மூத்த வழக்கறிஞர் திருமிகு AR L சுந்தரேசன் அவர்களின் தலைமையில் வாழ்த்தரங்கமும் சிறப்பாக நடைபெற்றது.
வழக்கறிஞர் திரு சுந்தரேசன் அவர்கள் தனக்கு இருக்கும் மிக நெருக்கடியான வேலைப் பழுவிற்கும் இடையில் , ஐயா வைப்பாராட்ட வந்திருந்து , தன்னையும் ஐயாவின் நற்பணிகளில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும், தன் பங்காக சிறிய தொகையை அளிப்பதாகவும், ஐயாவை நான் வாழ்த்தவரவில்லை ,ஐயாவிடம் நான் வாழ்த்துப் பெற வந்துள்ளேன் என்றும் அழகாக தன் எண்ணங்களைப் பதிவு செய்தார்கள்.
ஐயாவின் ஏற்புரையில் , தன்னைப் பின்பற்றி எல்லோரும் இந்த சமுதாயத்திற்கான பங்களிப்பை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள்.
பயனடைந்த பிள்ளைகள் அனைவரும் ஐயாவால் பெற்ற பயனையும், தங்களின் இன்றைய உயர்ந்த நிலைக்கு ஐயாவே காரணம் என்பதையும் , உணர்வுப் பூர்வமாக பதிவு செய்தார்கள்.
காலையில் 9 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுகள் தொடர்ந்து எந்தவித்த் தொய்வுமின்றி, நல்ல உணவுப் பரிமாறுதலோடு , மிக நேர்த்தியாக நடந்தேறின.
ஐயாவின் இந்த வெற்றிக்கு தான்மட்டும் காரணமில்லை, தன் உறவினர்களும் நண்பர்களும்
என்று ஐயா சொல்வதுபோல , இந்த விழா வெற்றிக்கு அமைப்பாளர் என்ற முறையில் நான்மட்டுமில்லை, என்பின்னால் ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது என்று பணிவோடு சொல்லும் தம்பி விஜயபிரபாகரனும் பாராட்டுக்குரியவர்கள்.
வாழ்க ஐயா பல்லாண்டு
நன்றி சபா சபா



No comments:

Post a Comment