Monday 23 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌀நம்மை மேம்படுத்தும் அனுபவ அறிவு..!*
அனைவரும் தேடியலையும் ஓர் அரிய செல்வம் தன்னிடம் தான் அது மிகுதியாக உள்ளது என்றும், மற்றவரிடம் இல்லை என்று ஒவ்வொருவரும் பிறரைக் குறித்து உறுதியாக நம்பக்கூடிய செல்வம் அறிவு.
*༺🌷༻*
சூழ்நிலை அறிவு, கல்வியறிவு, எழுத்தறிவு, இயற்கை அறிவு, அனுபவ அறிவு என்னும் காட்சி அறிவுபோன்ற பல வகையான அறிவுகள் கூறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையன; எனினும் காட்சியறிவு என்னும் *அனுபவ அறிவே* மிகவும் சிறந்தது என்பது சான்றோர் கருத்து. #மகரயாழ் தனிமனித வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நெருக்கடிக் காலங்களில் மிகவும் பயன்படக் கூடியது அனுபவ அறிவுதான்.
*༺🌷༻*
கம்பராமாயணத்திலிருந்து ஒரு சான்றினைக் காணலாம். கிஷ்கிந்தா காண்டத்தில் வாலியின் சினத்திற்கு ஆளாகித் தோற்றோடிய சுக்ரீவன் ராமனின் துணை கிடைத்தவுடன் மீண்டும் வாலியின் அரண்மனைக்கு முன்னே வந்து நின்று வாலியைப் போருக்கு அழைத்து அறைகூவல் விடுக்கிறான். வாலியும் போருக்குப் புறப்படுகிறான். அப்போது அவன் மனைவி தாரை வாலியை நோக்கி, "தங்களின் தோள் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றோடிய பலவீனனான சுக்ரீவன் மீண்டும் தங்களை வலிந்து போருக்கு அழைப்பதில் ஏதோ வஞ்சனை உள்ளது. அவனுக்கு இப்போது ராமனின் துணை கிடைத்துள்ளது;
எனவே போரைத் தவிர்த்திடுக” என்று அறிவுரை கூறுகிறாள். வாலியின் மனைவி அறிவுத்திறன் உடையவள். ஆனால் வாலி வரங்கள் பல பெற்றிருந்தாலும் வலிமையும் வீரமும் உடையவனாக இருந்தாலும் அறிவு நலம் இல்லாதவன். அறிவுடைய மனைவியின் பேச்சைக் கேட்காமல் போருக்குச் சென்று ராமனின் அம்புக்கு இரையாகிறான். இது ராமாயணம் தரும் செய்தி.
*༺🌷༻*
வியாசர் பாரதத்தில் குருஷேத்திர யுத்தம் முடிந்த பிறகு குல முதல்வனான திருதராஷ்டிரன் மனத்தில் பழி உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. சஞ்சயன் அவனுக்குத் தேறுதல் கூறி, பாண்டவர்களை ஆசிர்வதித்து ஆட்சி புரிய அழைக்குமாறு அறிவுரைகள் கூறுகிறான். மகரயாழ் திருதராஷ்டிரன் பாண்டவர்களை ஒவ்வொருவராக அழைத்து அரவணைத்து ஆசி கூறுகிறான். ஒரு கட்டத்தில் பீமன் வந்து திருதராஷ்டிரனை வணங்கும்போது அவனைக் கட்டித் தழுவுகிறான். ஆயிரம் யானைகளின் பலமுடையவனான திருதராஷ்டிரன் மனதில் பழி உணர்வு மேலோங்க அவன் பீமனை இறுக்கமாகத் தழுவுகிறான். பீமன் உடல் துண்டு துண்டாக நொறுங்கி வீழ்கிறது. அந்தக் கணத்தில் குற்ற உணர்வும் தான் செய்த தவறும் மனத்தை உறுத்த திருதராஷ்டிரன் கதறி அழுகிறான். இப்போதுதான் பாண்டவர்களின் துணைவனான கிருஷ்ணன், “திருதராஷ்டிரா! உன் மகனான துரியோதனனைக் கொன்ற பீமன் மீது உனக்கு ஆழ்மனத்தில் வஞ்சம் இருக்கும் என்பதை ஊகித்து நான்தான் பீமனுக்குப் பதிலாக பீமனைப் போன்ற ஒரு இரும்புச் சிலையை உன்னிடம் அனுப்பினேன். இப்போது நீ இறுக்கிப் பிடித்து நொறுக்கியது வெறும் இரும்புச்சிலைதான்; அது பீமனல்ல; *உன் மனத்தில் இருந்த பழி உணர்ச்சி இப்போது விலகிவிட்டதால் இனி நீ பீமனை ஆசிர்வதிக்கலாம்”* என்று கூறுகிறான். கிருஷ்ணன் அனுபவ அறிவுமிகுதியாக அமையப் பெற்றவன்; பாரதத்தில் பல இடங்களில் இது வெளிப்படுகிறது. இங்கும் *பீமனைக் காப்பாற்றியது கிருஷ்ணனின் அனுபவ அறிவு எனும் காட்சியறிவுதான்!* அனுபவ அறிவு மிகவும் இன்றியமையாதது என்பது இப்போது புரிகிறதல்லவா?
*🙏முனைவர் ம.திருமலை,💐*
*முன்னாள் துணைவேந்தர்,*
*தமிழ்ப்பல்கலைக்கழகம்.*

No comments:

Post a Comment