Tuesday 10 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நண்பர் மனிதத்தேனீ சொக்கலிங்கம் அவர்களுக்கு வாழ்த்து!
நேரந் தவறாமை, நேர்மை, எளிமையுடன்
ஈரமனங் கொண்ட மனிதநேயம், சான்றாண்மை
யாருக்கும் அஞ்சாத நல்லொழுக்கப் பண்புகள்
தேரோடும் மாமதுரை பேர்சொல்லும் சொக்கலிங்கம்
பார்போற்றும் செந்தமிழின் தூது.
அன்றிருந்து இன்றுவரை மாறாத நட்புடன்
நன்கு பழகிவரும் பண்பாளர் சொக்கலிங்கம்
அன்பும் அறனும் இணைந்திருக்க
வாழ்க்கையில்
முன்னேறும் பாங்கினை வாழ்த்து.
இல்லறத்தில் அன்னை,மனைவி மகனுடன்
எல்லா உறவுகளை நாளும் அரவணைத்துச்
செல்லும் கடமை உணர்விலே சொக்கலிங்கம்
நல்லறத்தின் சான்றுதான் வாழ்த்து.
கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாக
எண்ணற்ற நற்பணியை ஆரவார மில்லாமல்
அந்தந்த நேரம் உரியவரைத் தேர்ந்தெடுத்துத்
தந்துதவும் பண்பினை வாழ்த்து.
பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் நிர்வாக
ஆற்றலென பன்முக ஆற்றல்கள் தன்னகத்தே
ஊற்றெடுக்கும் ஆற்றலாளர் சொக்கலிங்கம் என்றென்றும்
பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்

No comments:

Post a Comment