Thursday 26 May 2022

ஏமாறுவதும் ஏமாற்றுவதும்.

 ஏமாறுவதும் ஏமாற்றுவதும்.

அந்தந்த நொடியை அழகாய் வாழ்ந்து விட
எல்லோருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை.
சிலர் மட்டும் அப்படி அமையும் வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை.
பொறுமை என்பது அவசியமான ஒன்று
விதைத்தவுடன் எவராலும் அறுவடை செய்து விட முடியாது.
எங்கேயும் எப்போதும் அள்பை உணர்தல் ஆகப்பெரும் மகிழ்ச்சி
அன்பிற்கு இனமில்லை.
அறிவுரைகள் எளிதில் கிட்டிவிடும்
அனுபவங்கள் அவமானங்களால் தான் வரும்.
கொண்டாட்டங்களின் குவியல் தான் இந்த வாழ்க்கை,
எதை எடுக்கிறோம்
எதைக் கொடுக்கிறோம்.
எப்படிக் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமே மாறுபடுகிறது.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது
நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொண்டது
எச்சரிக்கையுடன் இருங்கள்.
நீங்கள் உதிர்க்கும் வார்த்தையில்
உதிரம் இல்லை
ஆனால் உயிர் உண்டு.
தவறுகளுக்குச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம்
திருத்திக் கொள்ளாததற்கு சூழ்நிலை காரணமாகாது.
ஏமாறுவதற்கும்
ஏமாற்றுவதற்கும்
சிறு வித்தியாசம்
ஒருவரின் அலட்சியம்
மற்றவருக்கு அவசியம்.
கற்றுக்கொள்வதை விட
காயம்படுவதே அதிகம் இங்கே.
உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள்
என்றும் நினைவில் வையுங்கள்.
உதவாதவர்கள் உங்கள் வெற்றிக்குரியவர்கள்
என்றும் மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment